tamilnadu

img

ரூ.5.50 லட்சம் கோடி ஈர்க்க அரசு திட்டம்

சென்னை, ஜன. 4- சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.5.50 லட்சம் கோடி அளவிற்கு முத லீடுகள் ஈர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

உலக முதலீட்டாளர் மாநாடு ஜனவரி 7, 8 தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் பன்னாட்டு நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. விழாவுக்கான ஏற்பாடு குறித்து சென்னை தலைமைச் செய லகத்தில் வியாழனன்று (ஜன. 4)  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோ சனை செய்தார். இதில் அமைச்சர்கள் துரை முருகன், எ.வ.வேலு, டி.ஆர்.பி. ராஜா,மதிவேந்தன் உள்ளிட்ட அமைச்சர்களும் தொழில் துறை செயலாளர் அருண் ராய் உள்ளிட்ட  அதிகாரிகளும் கலந்துகொண்டனர். தொழில்துறை, ஆட்டோ மொபைல், எரிசக்தித்துறை, தகவல்  தொழில்நுட்ப துறை, சுகாதாரம், வீட்டுவசதித்துறை,  சுற்றுலா, கைத்தறித்துறை,பண்பாட்டுத் துறைகளில் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.

எரிசக்தித் துறையில் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி சார்ந்து அதிக முதலீடுகள் மேற்கோள்ளப்பட உள்ளன என்றும்,  அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், தைவான் உட்பட உலகின் பல  நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன என்றும் கூறப்படுகிறது. தொழில்துறை சார்ந்த முதலீடுக ளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ‘தொழில் வழிகாட்டி மையம்’ மூலம்  மேற்கொள்ளப்படுகின்றன. அதே போல், உலக முதலீட்டாளர் மாநா ட்டின் தொடக்க விழா நிகழ்ச் சியை பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு ஒளிபரப்ப மாவட்ட ஆட்சியர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.