சென்னை, டிச.8- ஒரு குழந்தைக்கு வெறும் ரூ.5 கூட கொடுக்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாடு சத்துணவு சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருவாரூரில் மாநிலத் தலை வர் ப.சுந்தரம்மாள் தலைமையில் நடை பெற்றது. திருவாரூர் மாவட்ட செயலாளர் ராஜ சேகரன் வரவேற்றுப் பேசினார். பொதுச் செய லாளர் அ.நூர்ஜஹான், பொருளாளர் பே. பேயத்தேவன் ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்த னர். மாநில துணைத் தலைவர்கள் கே.அண்ணா துரை, பா.பாண்டி, மு.தமிழரசன், ஜி.சாவித்திரி, ஆ.அமுதா, ஜெ.சசிகலா, மாநிலச் செயலா ளர்கள் ஆ.பெரியசாமி, கு.சத்தி, ஏ.மலர்விழி, கே.சுபந்தி, எம்.மஞ்சுளா உள்ளிட்டோர் பங் கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் வருமாறு: மாநில பேரவையில் எடுக்கப்பட்ட அறை கூவல் தீர்மானத்தின் அடிப்படையில் நடத்தப் பட்ட போராட்டங்களின் விளைவாக சமூக நலத்துறை ஆணையாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத சூழ்நிலையில் தொடர்ந்து மாவட்ட தலைநகரங்களில் பேரணி மற்றும் மறியல் போராட்டம் எழுச்சியோடு நடத்தப்பட்டது. அதன்பின்னும் அரசு அழைத்துப் பேச மறுத்தது என்பது சத்துணவு ஊழியர்கள் மத்தி யில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்வைக்கப்பட்டுள்ள வாழ்வாதார கோரிக்கையான வரையறுக்கப்பட்ட ஊதி யம், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதி யம், ஒட்டுமொத்த தொகை அமைப்பாளர் களுக்கு ரூ.5 லட்சம், சமையலர் & சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்குதல், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், இன்றைய விலைவாசியில் சத்துணவு உண் ணும் குழந்தைகளுக்கு மேலும் தரமான உணவு அளிப்பதற்கு அதற்குரிய மானியத்தை உயர்த்தி ஒரு குழந்தைக்கு ஐந்து ரூபாய் வழங்க வேண்டும், எரிபொருள் சிலிண்டர் களை அரசே வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அரசு செவி சாய்க்க மறுத்து வருகிறது. கடந்த போராட்டத்தின்போது ஏற்றுக் கொண்ட உணவு தயாரிப்பு செலவு தொகை யை விலைவாசிக்கு ஏற்ப உயர்த்துதல் என்ற அடிப்படையில் கடந்த பட்ஜெட்டில் இதற்காக ரூ.98 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தும் அரசு ரூ.48.30 கோடி மட்டுமே அனுமதித்து ஆணை வெளியிட்டுள்ளது.
சிலிண்டர் விலை அரசுக்கு தெரியாதா?
அரசு வழங்கும் எரிவாயு மானியத்தில் எரி வாயு சிலிண்டர் வாங்க முடியாத சூழ்நிலை உள்ளது. 750 குழந்தைகளுக்கு ஒரு சிலிண்டர் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அரசால் அனுமதிக்கப்பட்ட தொகை 750 குழந்தைகளுக்கு சுமார் 450 ரூபாய் மட்டுமே யாகும். எனவே அரசு வழங்கும் நிதியில் சிலிண்டர் வாங்க முடியாது. சத்துணவு ஊழி யர்களின் ஊதியத்தில் ஒரு பகுதியில்தான் செலவு செய்ய வேண்டிய கட்டாய நிலைக்கு தமிழக அரசு தள்ளி உள்ளது. உடனடியாக எரி வாயு மானியத் தொகை உயர்த்தி வழங்கப்பட வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக மாநிலச் செயலாளர் ஆர்.அய் யம்மாள் நன்றி கூறினார்.