tamilnadu

img

கோகுல்ராஜ் கொலை வழக்கு - ஆயுள் தண்டை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

  கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்த மதுரை சிறப்பு நீதிமன்றம் கொலையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட தீரன் சின்னமலை பேரவையின் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
ஆயுள் தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதிகள் 10 பேரின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது , மதுரை சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பில் பிழை இல்லை எனக்கூறி தண்டனையை உறுதி செய்துள்ளது.
 

;