tamilnadu

img

பாரதிதாசன் பல்கலை.யில் உயர்த்திய தேர்வுக் கட்டணத்தை உடனே திரும்பப்பெறுக!

சென்னை, அக்.13 - பாரதிதாசன் பல்கலைக்கழ கத்தில் உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தெள. சம்சீர் அகமது, மாநிலச் செயலாளர்  கோ. அரவிந்த சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

திருச்சி பாரதிதாசன் பல் கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு கட்டணத்தை கூடுதலாக உயர்த்தி 07.10.24 அன்று ஆணையை வெளியிட்டிருக் கிறது. இக்கல்லூரிகளில் பெரும் பாலும் ஏழை எளிய விவசாய மற்றும் விவசாயக் கூலி தொழி லாளர்களின் பிள்ளைகளே கல்வி பயின்று வருகின்றனர். 

இக்கல்வியாண்டில் தொடக்கத்திலிருந்தே பருவத் தேர்வுக்கான இளநிலை பாடப்பிரிவில் ஒரு பாடத்தின் எழுத்து தேர்வுக்கான கட்டணம் 75 ரூபாயிலிருந்து 100 ரூபா யாக உயர்த்தி இருக்கிறது. முது நிலை பாடப்பிரிவுகளுக்கு 150 ரூபாயிலிருந்து 175 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. மொத்த மதிப்பெண் சான்றிதழுக்கான கட்டணம் 200 ரூபாய் இருந்து  600 ரூபாய் வரை உயர்த்தப் பட்டிருக்கிறது.

தேர்வு கட்டணத்தை உயர்த்திய நிலையில் அதனை  உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் அவ்வாறு செலுத்தத் தவ றினால் அபராதத் தொகை என்ற பெயரில் நான்கு மடங்கு தொகை யுடன் ஜிஎஸ்டி.யையும் இணைத்து பல்கலைக்கழகம் நிர்வாகம் அதிக பணம் வசூ லிப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியது. உயர்த்தப்பட்டுள்ள தேர்வுக் கட்டணத்தை மாண வர்களின் நலன் கருதி உடன டியாக திரும்பப்பெறவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்க பட்டுள்ளது.