சென்னை,ஜூன் 6- தீக்கதிர் தென்சென்னை மாவட்ட செய்தி யாளரும் பத்திரிகையாளர்கள் நலவாரி யத்தின் உறுப்பினருமான கவாஸ்கர் தந்தை செல்வம் சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியினரும் குடும்பத்தினரும் உறவினர்களும் பத்திரிகையாளர்களும் அஞ்சலி செலுத்திய பிறகு சென்னை அரசு மருத்துவக்கல்லுரி, மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
முன்னதாக அரும்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் வெ.ராஜசேகரன், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முரு கன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை), தமுஎகச மாநில பொரு ளாளர் சைதை ஜெ. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், செயலாளர் ஏ.வி. சிங்கார வேலன், மூத்தபத்திரிகையாளர் மயிலை பாலு, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தீக்கதிர் சென்னைப்பதிப்பு மேலாளர் (பொறுப்பு) உஷா, முன்னாள் பொதுமேலாளர் சி.கல்யாண சுந்தரம், கோவை பதிப்பு நிர்வாகி மாணிக்கம், பொறுப்பாசிரியர் அ.விஜய குமார், செய்தி ஆசிரியர் ஶ்ரீ ராமுலு ஆகியோர் அஞ்சலி செலுத்தியதோடு செல்வத்தின் துணைவியார் அமுதாவுக்கு ஆறுதல் கூறினர்.
இரங்கல்
தீக்கதிர் சிறப்பாசிரியர் மதுக்கூர் ராம லிங்கம், தலைமை பொதுமேலாளர் என்.பாண்டி, ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், பத்திரிகையாளர்கள் சங்க (டியூஜெ) தலைவர் எஸ்.டி.புருஷோத்தமன், தலைமை செயலக செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கவாஸ்கரை தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
இறுதி நிகழ்ச்சியில் பத்திரிகை யாளர்கள், ஊடகவியலாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், வாலிபர், மாதர், மாணவர் சங்கத்தினர் பங்கேற்ற னர். நிறைவாக பிற்பகல் 1 மணிஅளவில் எம்எம்சி மருத்துமனைக்கு மறைந்த செல்வத்தின் உடல் தானமாக வழங்கப் பட்டது.