tamilnadu

நாடாளுமன்ற நாட்காட்டியில் காந்தி, அம்பேத்கர் படங்கள் புறக்கணிப்பு

சென்னை,டிச.21- நாடாளுமன்ற நாட்காட்டியில் மீண்டும் அண்ணல் அம்பேத்கர் புறக்கணிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மக்களவை சார்பில் வெளியி டப்பட்டுள்ள 2025 நாட்காட்டி “அரசி யல் சாசனத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவை” தனது கருப்பொருளாக கொண்டிருந்தாலும் அதன் உள்ளடக்கத்தில் எங்கேயுமே அண்ணல் அம்பேத்கரின் உருவமோ, அவரைப் பற்றிய குறிப்போ, அவரின் பெயரோ இடம்பெறவில்லை என்பது அராஜகமானது ஆகும். தேசப்பிதா மகாத்மா காந்திக்கும் அந்த நாட்காட்டியில் இடம் தரப்படவில்லை.

 இச்சம்பவம் ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சி நிரலின் பிரதிபலிப்பு என் பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்.  அந்த நாட்காட்டியில் படங்கள் இடம் பெறாமல் இல்லை. அரசியல் சாசனத்தின் உருவாக்கத்தில் ஈடு பட்ட ஓவியர்கள், கையெழுத்து பிரதி யாளர்கள் பெயர்களும் படங்களும் உள்ளன.

அவர்கள் அங்கீகரிக்கப்படு வதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து வரைவுக் குழுவின் பல உறுப்பினர்கள் ஒத்து ழைக்க முடியாமல் போன சூழலிலும் கூட அரசியல் சாசனத்தை உரு வாக்கித் தந்த பேராளுமையின் பெய ரும் உருவமும் எப்படி நாட்காட்டியை வடிவமைத்தவர்களின் கருத்தில் வராமல் போனது என்பதே கேள்வி.  வரலாற்றை திரிப்பதும், வர லாற்று ஆளுமைகளை மறைப்பதும் பாசிச மனோபாவம் கொண்ட ஆட்சியாளர்களின் திட்டமிட்ட நடவ டிக்கை. சமூக நீதியும், ஜனநாயக மும் அவர்களுக்கு கசப்பது இயல்பா னது தான்.

ஆனால் இந்திய நாட்டின் ஜனநாயக எண்ணம் கொண்டவர்க ளும், சமூக நீதியில் அக்கறை கொண்டவர்களும் ஆட்சியாளர்க ளின் இத்தகைய செயல்களை அனுமதிக்க மாட்டார்கள், மக்களைத் திரட்டி எதிர்கொள்வார்கள்.  மக்களவையின் இந்த புதிய நாட்காட்டி திரும்பப் பெறப்பட வேண் டும், மகாத்மா காந்தி - அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் பங்க ளிப்பை அங்கீகரிக்கிற வகையில் புதிய நாட்காட்டி வெளியிடப்பட வேண்டும். இவ்வாறு  அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.