சென்னை, ஆக. 22 - தமிழ்நாட்டில், கேலோ இந்தியா இளை ஞர் விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 19 முதல் 31 வரை சென்னை, மதுரை, திருச்சி. கோவை ஆகிய நகரங்களில் நடைபெற்றது. இப்போட்டிகளில் 31 மாநிலங்களி லிருந்து (யூனியன் பிரதேசம் உட்பட) 2 ஆயி ரத்து 875 ஆண்கள் மற்றும் 2 ஆயிரம் 755 பெண்கள் என மொத்தம் 5,630 விளையாட்டு வீரர் - வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டிலிருந்து 570 விளையாட்டு வீரர் - வீராங்கனைகள் 26 போட்டிகளில் கலந்து கொண்டு 38 தங்கப் பதக்கம், 21 வெள்ளிப் பதக்கம், 39 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 98 பதக்கங்கள் பெற்று தேசிய அளவில் இரண்டாம் இடத்தைப்பிடித்தனர்.
அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகள், அலுவலர்கள் மற்றும் விளையாட்டு தொழில்நுட்ப வல்லுநர்கள், நட்சத்திர ஓட்டங்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன. கேலோ இந்தியா போட்டிகளை ஜனவரி 19 அன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளை விளக்கும் வகையில், 2023 என்ற ‘காலப்பேழை’ புத்தகம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தயாரிக்கப்பட்டது. இந்த காலப்பேழை புத்தகத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆக. 22 அன்று வெளியிட்டார்.