சென்னை, டிச. 1 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்திய சென்னை மாவட்டக் குழு உதயமானது. செயலாளராக ஜி.செல்வா தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு அமைப்பு மாநாடு ஞாயிறன்று (டிச.1) கேரளா சமாஜத்தில் நடைபெற்றது. மாநாட்டுக் கொடியை மூத்த தலைவர் சந்திரசேகரன் ஏற்றினார். எம்.வி. கிருஷ்ணன், வி.தனலட்சுமி, வி.விக்னேஷ் வரன் ஆகியோர் தலைமைக்குழுவாக இருந்து மாநாட்டை நடத்தினர். ஆர்.மணி மேகலை அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வினை ஊக்கியாக... மாநாட்டை தொடங்கி வைத்து மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் பேசுகையில், “இந்தியாவில் மதச்சார்பின்மை நீடித்து இருப்பதற்கு கம்யூனிஸ்ட்டுகளின் பங் களிப்பு மகத்தானது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பின்னடைவை இந்தியாவில் இடதுசாரி இயக்கமும் சந்திக்கிறது. இதனை வெல்ல மத்திய சென்னை மாவட்டக் குழுவும் வினை ஊக்கியாக செயல்பட வேண்டும்” என்றார். “நாட்டின் விடியல் இடதுசாரிகளிடமே உள்ளது. பாசிச தன்மை வாய்ந்த பாஜக ஆட்சியை இடதுசாரி இயக்கம் வீழ்த்தும். அதற்கேற்ப அமைப்பை பலப்படுத்து வோம்” என்றும் அவர் அழைப்புவிடுத்தார். புதிய மாவட்டக்குழு தேர்வு ஸ்தாபன அறிக்கையை மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம் சமர்ப்பித்து பேசி னார். புதிய மாவட்டக்குழுவை மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தர்ராஜன் முன்மொழிந் தார். 29 பேர் கொண்ட மாவட்டக்குழுவின் செயலாளராக ஜி.செல்வா தேர்ந்தெடுக் கப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் களாக ஜி.செல்வா, பி.சந்திரசேகரன், சி.திருவேட்டை, இரா.முரளி, எஸ்.கே.முருகேஷ், எம்.தாமோதரன், வி.தன லட்சுமி, இ.சர்வேசன், கே.முருகன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டக்குழு உறுப்பினர்களாக எம்.வி.கிருஷ்ணன், ஏ.ஜி.காசிநாதன், எஸ்.ரமேஷ்குமார், எம்.தயாளன், பி.சீனிவாசன், எஸ்.பாலசுப்பிரமணியம், ப.சுந்தரம், எம்.ஜலாலுதீன், எம்.ஆர்.மதியழகன், எஸ்.சிவசுப்பிர மணியன், இரணியன், ஏ.ஆறு முகம், ஆர்.மணி மேகலை, ஆர்.அருள்குமார், மகேந்திரவர்மன், டி.ஜெய்சங்கர், விக்னேஷ்வரன், எஸ்.மஞ்சுளா, எஸ்.மனோன்மணி தேர்வு செய்யப் பட்டனர். ஒருவார பிரச்சார இயக்கம் நிர்வாகிகளை அறிமுகம் செய்து மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிறை வுரையாற்றுகையில், “பெருமுதலாளித் துவ கார்ப்பரேட் ஆட்சி நடந்து கொண்டி ருக்கிறது. இடஒதுக்கீட்டை ஒழிக்கும் நோக்கமும் உள்ளடக்கியே பொதுத் துறைகள் தனியார்மயமாக்கப்படுகின்றன. நீதிமன்றமும் ஆட்சியாளர்களுக்கு இசை வாக நடந்து கொள்கிறது. அனைத்தும் கார்ப்பரேட்மயமாகி வருகிறது. பாஜக வுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய கட்சிகள் முடங்கிக் கிடக்கின்றன. பாஜக விற்கு சிம்மசொப்பனமாக இடதுசாரிகள் மட்டுமே உள்ளனர்” என்றார். “தமிழகத்தில் சில சாதிய அமைப்பு களை பயன்படுத்தி மக்களை திரட்ட பாஜக முயற்சிக்கிறது. அவற்றையும் முறியடிப் போம். பாஜக அரசின் பொருளாதார கொள்கையை எதிர்த்து தமிழகம் முழு வதும் ஒருவாரம் (டிச.10-15) வீடுவீடாக சென்று பிரச்சாரம் நடைபெறும். அதன் தொடர்ச்சியாக 48 மணி நேர (டிச.17-18) தொடர் முழக்கப் போராட்டமும் நடைபெறும்” என்றும் அவர் கூறினார். மாநாட்டில் மாநிலக்குழு உறுப்பினர் கள் க.பீம்ராவ், ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னை மாநகரத்தின் குவிமையமான இந்த மாவட்டத்தில் மத்திய மாநில அரசு அலுவலகங்களின் தலைமையகங்கள் அமைந்துள்ளன. இம்மாவட்டத்தில் துறை முகம், எழும்பூர், வில்லிவாக்கம், அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. சென்னை மாநகராட்சியின் 39 வட்டங்களை உள்ளடக்கிய இம்மாவட்டத்தில் சுமார் 13.5 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.