tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

போட்டித் தேர்வு: மாணவர்களுக்கு  கட்டணமில்லா பயிற்சி

சென்னை, ஜன.27- டிஎன்பிஎஸ்சி,எஸ்.எஸ்.சி, ஐ.பி.பி.எஸ், ஆர்ஆர்பி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள  அறிக்கையில், போட்டித்தேர்வு களில் கலந்து கொள்ளும் தமிழ் நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்கள் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய  வண்ணாரப்பேட்டையில் உள்ள சர்  தியாகராயா கல்லூரியில் 500 இடங்க ளுக்கும், சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300  இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படு கிறது.

மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழி யாக விண்ணப்பங்கள் பெற்று சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி  வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை ஆறு மாத காலம் வாராந் திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும்  தேர்வர்கள் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 1.1.2024 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி, போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங் களில் உணவு தங்கும் வசதிகள் இல்லை. பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் www.cecc.in வாயிலாக இம் மாதம் 29 ஆம் தேதி முதல் பிப். 12 வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 044-25954905 மற்றும் 044-28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழ்நாடு அரசால் நடைமுறை படுத்தப்  பட்டுள்ள இனவாரியான படங்களுக்கு  ஏற்ப தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களின் விவரங்கள் மேற்குறிப் பிட்ட இணையதளத்தில் வெளியிடப் படும். மார்ச் மாத முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளுநரை சாடிய ப.சிதம்பரம்
சென்னை,ஜன.27- முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் தள பக்கத்தில், 1857 இல் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் மூன்று பல்கலைக்கழகங்களில், சென்னைப் பல்கலைக்கழகமும் ஒன்று.  கடந்த 5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் உள்ளது. ஆளுநர்-அரசு இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தான்  இதற்கு காரணம். ஆளுநர் தான் பல சர்ச்சைகளுக்கு காரணம் என சிலர் கூறுகின்றனர். உயர்கல்வியின் நிலை  வருத்தமாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார். 

மருத்துவமனையில் சாந்தன்  அனுமதி
சென்னை,ஜன.27- ராஜீவ்காந்தி கொலை வழக்கில்  சிறையில் இருந்து விடுதலையான சாந்தன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மஞ்சள் காமாலை பாதிப்பு அதிகரித்ததால் திருச்சியிலிருந்து  சென்னை அழைத்து வரப்பட்டு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறையில் இருந்து விடுதலையான பிறகு திருச்சி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் சாந்தன் தங்கி இருந்தார்.

காலம் கடந்த பத்ம பூஷன் விருது: 
பிரேமலதா விஜயகாந்த் கருத்து 

சென்னை,ஜன.27- மறைந்த தேமுதிக தலைவர் விஜய காந்துக்கு பத்ம பூஷன் விருது காலம் கடந்து அறிவிக்கப்பட்டுள்ளதாக அவ ரது மனைவியும் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரேமலதா வேதனை  தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘‘காலம் கடந்து, காலன் எடுத்துச் சென்ற பிறகு விஜயகாந்துக்கு இவ்விருது கிடைத்துள்ளது. அவர்  உயிரோடு இருக்கும்போது இவ்விருது  கிடைத்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சி யுடன் இவ்விருதை ஏற்றுக் கொண்டிருப் போம்” என்று தெரிவித்துள்ளார்.