tamilnadu

img

மாநில மகளிர் ஆணையத்தில் இலவச சட்ட சேவை மையம்

சென்னை, ஜூலை 16- தமிழ்நாடு மாநில மகளிர் ஆணை யம், பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினை கள், வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாப்பதற்கான உரிய அதிகாரங் களைப் பெற்ற ஒரு சட்ட ரிதியான அமைப்பாக 1993-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.   இவ்வாணையம் சேப்பாக்கத்தில் உள்ள கலச மஹால் கட்டிடத்தின் முதல் தளத்தில் இயங்கி வருகிறது.  அரசியல் அமைப்பு மற்றும் பிற சட்டங்களின் கீழ் பெண்களைக் காப்பதற்கு ஏற்படுத்தப் பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் மற்றும்  விதிகள் பெண்களின் நலனுக்கு எதிராக மீறப்படும் பட்சத்தில் அது தொடர்பாக பெறப்படும் புகார்களை பெற்றும் அல்லது தாமாக முன்வந்தும் அவற்றை விசாரித்து, உரிய அதிகார அமைப்புகளின் கவனத் திற்கு கொண்டு சென்று தக்க நடவடிக்கை எடுத்திட ஆணையம் பரிந்துரைக்கின்றது.   கடந்த ஆண்டு மகளிர் ஆணையம், பாதிக்கப்பட்ட மகளிரிடமிருந்து 3388 புகார்களை பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.  இவற்றில் 439 புகார்கள் நேரடி விசாரணை மூலம் முடிக்க ப்பட்டு பெண்களுக்கு தேவையான நிவா ரணம் கிடைத்துள்ளது.  மீதமுள்ள மனுக் கள் மீது தொடர் நடவடிக்கை நிலுவை யில் உள்ளது.   நடப்பாண்டு ஜனவரி 2024 முதல் 2107 மனுக்களை பெற்று நட வடிக்கை எடுத்து வருகிறது.   பெண்களுக்கு சட்ட ரிதியான உதவி  எளிதில் கிடைக்கச் செய்திடும் நோக்கத்தில், தேசிய மகளிர் ஆணையம் கடந்த 2022 முதல் அனைத்து மாநில மகளிர் ஆணையங்களுக்கும் நிதி உதவி  செய்து படிப்படியாக இலவச சட்ட சேவை  மையத்தினை அமைத்து வருகிறது.  இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையமும் இப்பணிக்கான ரூ.2லட்சத்தை பெற்று நிதியுதவிக்கான அனுமதியினை தேசிய மகளிர் ஆணை யத்திடமிருந்து பெற்று மாநில இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழுவுடன் ஒருங்கிணைந்து, இலவச சட்ட சேவை மையத்தினை அதன் அலுவலகத்தில் அமைத்து உள்ளது.  இம்மையத்திற்கு மாநில இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு வாயிலாக வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவர்.  வாரத்தில் 5 நாட்கள் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணி முதல் 5  மணி வரை இம்மையம் செயல்படும்.       தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் சார்பாக அமைக்கப்பட் டுள்ள இம்மையம் பாதிக்கப்பட்ட மகளி ருக்கு நீதித்துறை நிர்வாகத்தின் கீழ் பல்வேறு நிலைகளில் செயல்படும் அதன்  அமைப்புகள் மற்றும் அவற்றின் பணி கள் குறித்து தெரிவித்து அவர்களின் பிரச்சினைகளுக்கு சிறப்பான தீர்வுகளை பெறுவதற்கு உதவும் ஒற்றைச் சாளர அமைப்பாக செயல்படும் என்று மகளிர் ஆணைய செய்திக்குறிப்பு தெரிவிக்கி றது.