tamilnadu

img

இலவச கண் பரிசோதனை  மற்றும் கண் தான பதிவு முகாம்

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் அலமாதி ஊராட்சி ஒருங்கிணைந்த மக்கள் இயக்கம் இணைந்து அலமாதி வெண்மணி படிப்பகத்தில் இலவச கண் பரிசோதனை  மற்றும் கண் தான பதிவு முகாமை நடத்தினர். இதில் ஜானகி நடராஜன் கண்பார்வை ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளையில் பணியாற்றும்  மருத்துவர் ரிதுலா தலைமை மருத்துவர்கள் கண் பரிசோதனையில் ஈடுபட்டனர்.  விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.து.கோதண்டன், ஒன்றிய நிர்வாகிகள் இ.ரவி, முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் டி.அலெக்ஸாண்டர், ஏ.ஜோசப்ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.