சென்னை, ஜூலை 11- மின் துறை சம்பந்தமாக தமிழக சட்டப்பேரவையில் அதி முக உறுப்பினர் செம்மலை எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி,“ஒரு மின்மாற்றியில் அதிக மின் இணைப்புகள் இருந்தால் பழுதாகும்போது மின் இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றது. அதுபோன்ற நேரங் களில் வேறொரு மின்மாற்றிகள் மூலம் அரை மணி நேரத்தில் மின்சாரம் கொடுத்து வருகிறோம். இருந்தாலும் இந்த மின் இழப்பையும் மின் இணைப்புகளையும் குறைக்க சிறிய மின் மாற்றிகள் அதாவது ஒற்றை துருவ மின்மாற்றி மூலமாக மின் இணைப்பு கொடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த திட் டம் அனைத்து பகுதிகளிலும் அரசின் நிதி நிலைமைக்கேற்ப விரைந்து செய்து கொடுக்கப்படும்” என்றார். மின் பழுது, தடை ஏற்பட்டால் நுகர்வோர் புகார் தெரிவிக்க உருவாக்கப்பட்ட மையத்தில் இலவச அழைப்பு எண் 1912 என்ற தொலைபேசி எண்ணில் கிட்டத்தட்ட 30 இணைப்புகள் உள்ளன. அனைத்து இணைப்புகளுக்கும் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதுபோல் என்னுடைய வீட்டிலும் தொடர்ந்து 24 மணி நேரமும் செயல்படக்கூடிய ஒரு தொலை பேசி வசதியும் உள்ளது. இந்த மையங்களுக்கு வரும் புகார் உட னடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு சரி செய்து கொடுக்கப்படுகிறது என்றார்.