tamilnadu

மோசடி மன்னர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும் கைது செய்க: கி.வீரமணி

சென்னை,டிச.8 ‘‘நான் சிவபெருமான் அவ தாரம்; உங்களுக்குக் குடியுரிமை தருகிறேன்’’ என்று இந்திய அரசுக்கே சவால் விடுபவராக மாறியுள்ள நித்தியானந்தாக்கள் உள்பட மோசடி மன்னர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும், சட்டம் அதன் கடமையைச் செய்யத் தவறக்கூடாது என்று  திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நித்தி யானந்தா நம் நாட்டு காவல்துறை யின் அல்லது வெளியுறவுத் துறை போன்ற துறையின் அதிகாரி களின், அதிகார வர்க்கத்தின் துணையே இல்லாமல் அவர் எப்படி தப்பித்து வெளிநாட்டில் ஒரு தீவையே  விலைக்கு எப்படிவாங்கியுள்ளார்? அந்தத் தீவுக்கு  கைலாயம் என்றும் பெயரிட்டு, ‘‘இந்து நாடாக’’ அதை அறிவித்து, ‘‘இங்கே வாருங்கள், நான் சிவபெருமான் அவதாரம்; உங்களுக்குக் குடியுரிமை தருகிறேன்’’ என்று நாளேடுகளில் செய்தியை இணையத்தின்மூலம் அவரே வெளியிட்டுப் பரப்பி, இந்திய அரசுக்கே சவால் விடுபவராக மாறியுள்ளார்! ‘‘விஜய் மல்லய்யா என்ற வங்கி மோசடி மன்னனை எப்படி வெளியேற விட்டீர்கள்’’ என்று காங்கிரசைப் பார்த்துக் கேள்வி கேட்ட அன்றைய எதிர்க்கட்சி  பா.ஜ.க. இன்றைக்கு மத்தியில் ஆட்சி நடத்துகிறது.வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வைர வியாபாரி, நீரவ்மோடி, பா.ஜ.க. ஆட்சியில் எப்படி வெளிநாட்டிற்குத் தப்பினார் என்ற கேள்விக்கே விடை இன்னும் கிடைக்காத நிலையில், நித்தியானந்தா என்ற பெயரில் ஒரு காவி மோசடிப் பேர்வழி சுதந்திரமாக வெளிநாடு சென்று வெளிநாட்டில் தீவு ஒன்றையே விலைக்கு வாங்கும் அளவுக்கு அவர் எப்படிப்பணம் சேர்த்தார்? இந்த நித்தியானந்தாக்களை விட்டுவிட்டால், நாட்டில் மேலும் பல நித்தியானந்தாக்கள் உரு வாகக்கூடிய அபாயமும் உண்டு, உடனடியாக மேல் நடவடிக்கை கள் மூலமாக  இந்தக் குற்றவாளி கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.