tamilnadu

img

மயிலாப்பூர் - மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்

சென்னை, செப்.13- தேவநாதனின் மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பதற்காக நாளை சிறப்பு முகாம் அமைக்கப்படுவதாகப் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிவித்துள்ளனர்.
 சென்னை மயிலாப்பூரில் உள்ளா தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’  நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடம் ரூ.525 கோடிக்கு மேல் மோசடி செய்த புகாரில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவரும், சிவகங்கை தொகுதியில் பாஜக வேட்பாளருமான தேவநாதன் கைது செய்யப்பட்டார். 
இந்நிலையில் இவர் மீது 3000 க்கு மேற்பட்டோர் புகார் அளித்த நிலையில் மயிலாப்பூரில் நாளை சிறப்பு முகாம் அமைக்கப்படுகிறது. உரிய ஆவணங்களுடன் வந்து புகார் அளிக்கலாம் எனப் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளனர்.