நான்கு மாநகராட்சிகள் புதிதாக உதயம்!
சென்னை, ஜூன் 29 - தமிழ்நாட்டில் புதுக் கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி, திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகளை இணைத்து திருவண்ணா மலை மாநகராட்சி, காரைக் குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், 5 ஊராட்சி களை ஒன்றிணைத்து காரைக் குடி மாநகராட்சி புதிதாக உத யமாகின்றன.
அதேபோல நாமக்கல்லும் மாநகராட்சியாக தரம் உயர்த் தப்படுகிறது.
இதுதொடர்பான சட்ட முன் வடிவுகளை, நகராட்சி நிர்வா கத்துறை அமைச்சர் கே.என். நேரு, சனிக்கிழமையன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி சட்டப்பிரிவில் மக்கள் தொகை 3 லட்சத்தில் இருந்து 2 லட்ச மாகவும், ஆண்டு வருமானம் ரூ. 30 கோடியில் இருந்து ரூ. 20 கோடியாகவும் குறைக்கப் பட்டு மாநகராட்சியாக தரம் உயர்த்த தடையாக இருந்த மக்கள் தொகை, ஆண்டு வரு மானத்தை தளர்த்தியும் இந்த மசோதாவை அமைச்சர் தாக் கல் செய்தார்.
அதன் மீது நடைபெற்ற விவாதத்தில் சட்டமன்ற உறுப் பினர்கள் தங்களது கருத்துக் களை தெரிவித்தனர். சிலர் விளக்கம் கேட்டனர். இதை யடுத்து அமைச்சர்கள் அனைத்து மசோதாக்களுக் கும் பதில் அளித்தனர். பிறகு, குரல் வாக்கெடுப்பு மூலம் அவை நிறைவேற்றப்பட்டன.
பூரண மதுவிலக்கு சாத்தியமா?
அமைச்சர் பதில்
சென்னை, ஜூன் 29- மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதாவின் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் முத்துசாமி, “தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கு என்பதில் எங்களுக்கு விருப் பம் தான். ஆனால், அதற்கான சூழல் தற்போது இல்லை. படிப் படியாக கடைகளை மூடினா லும் குடிப்பவர்களின் எண் ணிக்கை குறையவில்லை. ஒரு மதுக் கடையை மூடி னால் மற்ற கடையில் மது வாங்கி அருந்துகிறார்கள். எனினும் படிப்படியாக மதுக் கடைகளை மூட வேண்டும் என்பதே அரசின் எண்ணம்” என்று குறிப்பிட்டார்.