பார்முலா 4 கார் பந்தயம் உயர் நீதிமன்றம் இன்று விசாரணை
சென்னை, ஆக. 27 - தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில், ‘பார்முலா 4 கார் பந்தயம்’ நடத்த முடிவு செய்யப் பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த இந்த கார் பந்தயம், மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மின் விளக்குகள், போட்டியை 8,000 பேர் கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், இதற்கு எதிராக தமிழ்நாடு பாஜக செய்தி தொடர்பாளர் பி.என்.எஸ். பிரசாத், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு புதன் கிழமை (ஆக.28) விசாரணைக்கு வருகிறது.
தயாநிதி மாறன் அவதூறு வழக்கு
எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜர்!
சென்னை, ஆக. 27 - 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன்னை வதூறு செய்து பேசியதாக தயாநிதி மாறன் எம்.பி., சென்னை எழும்பூர் நீதிமன்றத் தில் அவதூறு வழக்கு தாக்கல்செய்தார்.
இந்த வழக்கை எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு செவ்வாயன்று (ஆக.27) சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி. ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரான நிலையில், விசாரணை செப்டம்பர் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பட்டு உள்ளது.