‘வேங்கை வயல்’ விசாரணையை
3 மாதத்தில் முடிப்போம்!
காவல்துறை உறுதி
சென்னை, ஏப்.16- புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி சத்யநாராயண பிரசாத் ஆகி யோர் அடங்கிய அமர்வில் செவ்வா யன்று (ஏப்ரல் 16) மீண்டும் விசார ணைக்கு வந்தது.
அப்போது, 15 மாதங்கள் ஆகியும் புலன் விசாரணையில் ஏன் இவ்வளவு தாமதம்? என காவல்துறைக்கு நீதிபதி கள் கேள்வி எழுப்பினர். அப்போது, இந்த வழக்கில் புலன் விசாரணை 3 மாதங்களில் நிறைவடையும் என்று சிபிசிஐடி காவல்துறை தரப்பில் உறுதி யளிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசார ணையை ஜூலை 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்
சென்னை, ஏப்.16- உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச் சர் இந்திரகுமாரி ஏப் ரல் 15 அன்று கால மானார். அவருக்கு வயது 73.
சென்னை அடையாறு காந்திநகர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப் பட்ட அவரது உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், தயாநிதி மாறன் உள் ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், இந்திரகுமாரியின் உடல் பெசன்ட் நகர் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வர் இந்திர குமாரி. 2006-ஆம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார். இவரது கணவர் வழக்கறிஞர். லேகா என்ற மகள் உள்ளார்.
சிபிஎம் தலைவர்களின் இன்றைய பிரச்சாரம்
கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்
திண்டுக்கல்
ஜி.ராமகிருஷ்ணன்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
மத்திய சென்னை
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது
சென்னை, ஏப்.16- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்க ளவைத் தேர்தல் பிரச்சாரம் புதன்கிழமை (ஏப்.17) மாலை 6 மணியுடன் நிறைவு பெறு கிறது. தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதி, புதுச்சேரியில் ஒரு மக்களவைத் தொகுதி என 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 அன்று தேர்தல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இதையொட்டி, கடந்த ஒரு மாதமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலம் முழு வதும் இந்தியா கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டா லின், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பரப்புரை மேற் கொண்டனர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, மூத்த தலைவர் ப. சிதம்பரம் ஆகியோர் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி, தலைமைக் குழு உறுப்பி னர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன், மூத்தத் தலை வர்கள் டி.கே. ரங்கராஜன், அ.சவுந்தர ராசன், மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி உள்ளிட்டோரும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தனர். திராவிடர் கழகத் தலைவர் கி. வீர மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் து.ராஜா, மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன், திமுக எம்.பி. கனிமொழி கருணா நிதி, கூட்டணி கட்சித் தலைவர்கள் வைகோ, ஆர். முத்தரசன், தொல். திருமா வளவன் உள்ளிட்ட தலைவர்களும் பரப்புரையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ஏப்ரல் 19 அன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேண் டும் என்ற அடிப்படையில், தமிழ்நாடு முழு வதும் புதன்கிழமை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.