tamilnadu

முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் தலைமறைவு

சென்னை, மார்ச் 9- கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  விழுப்புரத்தில் அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற  நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்  சிக்கு பாதுகாப்பு பணிக்காக வந்த பெண் காவல் கண்காணிப்பாளர் ஒருவருக்கு அப்போது சிறப்பு டிஜிபியாக ராஜேஷ் தாஸ்  பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்தது தொடர்பான  வழக்கில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் சிறப்பு டிஜிபி  ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

 இந்தத் தண்டனையை நிறுத்தி வைக்க  கோரியும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் ராஜேஷ் தாஸ்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்  கல் செய்தார். அந்த மனுவை சென்னை  உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை யடுத்து எப்போது வேண்டுமானாலும்  ராஜேஷ் தாஸ் கைது செய்யப்படலாம் என  தகவல் வெளியானது. இந்த நிலையில்  சனிக்கிழமை அவரை கைது செய்வ தற்காக சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு சிபிசிஐடி காவல்துறையினர் சென்றனர்.

அவர்கள் வருவது தெரிந்ததும் ராஜேஸ் தாஸ் தலைமறைவாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து தலை மறைவான ராஜேஷ் தாஸை கைது செய்ய  காவல்துறையினர் நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றனர்.