சென்னை, ஜூலை 27- பாரிஸில் ஜூலை 26 அன்று நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா வுடன் ஒலிம்பிக் உற்சாகம் தொடங்கிவிட்டது. அதே நாளில், தமிழகத்தின் சென்னையில் ஒரு வித்தியாசமான விழா நடந்தது. ஷரோன்பிளை நிறுவனத்தின் சார்பில் நடை பெற்ற விழாவில் நீண்ட காலமாக மறக்கப் பட்ட ஹக்கியில் இந்தியாவை ஒளிரச்செய்த முதுபெரும் விளையாட்டு வீரர்கள் கவுர விக்கப்பட்டனர்.
மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்ற அணியில் இடம் பெற்றிருந்த வாசுதேவன் பாஸ்கரன், முனீர் சைட், சார்லஸ் கொர்னேலியஸ், விக்டர் ஜான் பிலிப்ஸ் மற்றும் கிருஷ்ணமூர்த்தி பெருமாள் ஆகிய ஐந்து ஒலிம்பிக் சாம்பியன்கள் கவுரவிக்கப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விருது மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. ஷரோன் பிளை நிறுவனர் விஷ்ணு கெமானி, இந்த விருதுகளை வழங்கினார். இந்த விருதுகள் அர்ப்பணிப்பு, பொறுப்பு ஆகியவற்றுக்காக அளிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய வாசுதேவன் பாஸ்கரன், இளம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் ஜொலிக்க தரமான ஊட்டச்சத்தும், அரசாங்கத்தின் ஆதரவும் தேவை என்றார்.விளையாட்டுக்கு தரமான ஆடுகளம், சிறந்த உள் கட்டமைப்பு வசதி களை மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்தித்தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் யென்னெஸ் இன்போ டெக் நிர்வாக இயக்குனர் என்.எஸ். சரவணன், கூடைப்பந்து வீராங்கனையும் தெற்கு ரயில்வே சிறப்பு பணி அதிகாரியுமான அனிதா பால்துரை ஆகியோர் கவுரவ விருந் தினர்களாக கலந்துகொண்டனர்.