சென்னை, ஆக. 21- “வெளிநாடுகளில் தேர்ந்தெடுக்கும் கல்வி நிறுவனங்கள் குறித்த உண்மைத் தன்மையை மாணவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்” என இன்டர்நேஷனல் எஜுகேஷன் குரூப் நிர்வாக இயக்குநர் மோஹித் கம்பீர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னையில் ஆக்ஸ்போர்டு இன்டர்நேஷனல் எஜுகேஷன் குரூப் சார்பில் இங்கிலாந்தில் உயர்கல்வி மேற்கொள் வதற்கான ‘பாத் வே’ திட்டம் குறித்து விளக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய மோஹித் கம்பீர் “தமிழ்நாடு மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி தொடர விரும்பு கின்றனர்.
ஆனால் முறையான அணுகு முறை இல்லாததால், அவர்களின் விருப்பம் நிறைவேறுவது இல்லை. வெளிநாடுகளில் உயர்கல்வி தொடர விரும்பும் மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் கல்வி நிறுவனங்கள் குறித்த உண்மைத் தன்மையை உறுதி செய்துகொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களிடம் பேசி கல்வியின் தரத்தை உறுதி செய்து கொள்ளவேண்டும். பெரும்பாலும் இந்திய மாணவர்கள், வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் பிஸினஸ் மேனேஜ்மண்ட், கம்பியூட்டர் சயின்ஸ்,பொறியியல் பாட பிரிவுகளை பயில விரும்புகின்றனர்.
“பாத் வே” திட்டம் என்பது 12 மாத பயிற்சி வகுப்பு ஆகும். இங்கி லாந்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெறும் வகையிலும், ஆங்கில மொழியில் அறிவு பெறும் வகையிலும் பயிற்சிகள் வழங்கப்படும்.
இந்திய கல்வி முறையை அங்கீகரிக் காத ஐரோப்பிய கல்வி நிறுவனங்கள் கூட “பாத் வே” திட்டம் மூலம் வழங்கப்படும் பயிற்சியை அங்கீகரித்து உள்ளது என்றார் அவர் . மேலும் தகவல் அறிய https://www.oxfordinternationaleducationgroup.com/education-services/ இந்த இணைய தளங்களை பயன்படுத்தலாம் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சக்சஸ் பாயிண்ட் தலைமை நிர்வாக இயக்குநர் ராஜதுரை துரைசாமி, “5 ஆண்டுகளாக ஆக்ஸ்ஃபோர்டு குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகி றோம். 13 முதல் 18 லட்சம் வரை கல்லூரி படிப்புக்கும் மட்டும் செலவாகும். பாத்வே மூலம் செல்லும் மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.8 லட்சம் வரை செலவாகும் என்றார்.