சிதம்பரம், செப். 7- வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லையென்றால். ஷட்டரை உடைத்து தண் ணீரை எடுப்போம் என்று விவ சாயிகள் கூறினர். வீராணம் ஏரி மூலம் பாச னம் பெறும் விவசாயிகள் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் பொதுப் பணித்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இம் மாதம் 11ஆம் தேதிக்கு முன்னதாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். அதன் பிறகு தண்ணீர் திறந்தால் நேரடி நெல் விதைப்பில் ஈடு படுத்தப்பட்டுள்ள ஆயிரக் கணக்கான ஏக்கர் விவ சாய நிலங்கள் பாழகி, விவ சாயிகளுக்கு நஷ்டம் ஏற்ப டும் என்று விவசாயிகளும் விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். வீராணத்தில் முழு கொள் ளளவு தண்ணீர் உள்ள நிலை யில் உடனே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்த தால் விவசாயிகளுக்கும் பொதுப்பணித்துறை அதி காரிகளுக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இத னைத் தொடர்ந்து பேசிய கோட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம் ராஜ், மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்திய பிறகு வரும் 11ஆம் தேதிக்கு முன்னமே தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.