tamilnadu

போக்குவரத்து துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலகுவான நிரந்தரபணி வழங்கக்கோரிக்கை

சென்னை, ஜூன் 26- போக்குவரத்துத் துறையில் பணி புரிந்து வரும் மாற்றுத்திறனாளி ஊழி யர்களுக்கான வேலைத் தன்மையில் மாற்றம் செய்து அவர்களுக்கு இலகுவான நிரந்தரம் பணி வழங்கிட வேண்டும் என்று  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் போக்குவரத்துத் துறையில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கான மாநில அளவில் தனிக்கிளை அமைப்பதற்கான அமைப்பு கூட்டம் சென்னையில் ஞாயிறன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு கடலூரை சேர்ந்த ராஜேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் சங்க வடசென்னை மாவட்டத் தலைவர் ஆர்.ஜெயச் சந்திரன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.மனோன்மணி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் எம்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு போக்குவரத்துக் கழக சிஐடியு சங்க பொதுச் செய லாளர் வி.தயானந்தம் வரவேற்றுப் பேசினார். மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில துணைத் தலைவர் வி.ராதா கிருஷ்ணன் போக்குவரத்துத் துறை யில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஊழி யர்களுக்கென தனி அமைப்பிற்கான தேவை குறித்து பேசினார். பல்வேறு மாவட்டங்களிலிருந்து கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி ஊழி யர்கள் நாங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து விரிவாக எடுதுரைத்தனர்.

இறுதியாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலத் தலைவர் தோ.வில்சன் போக்குவரத்துத்துறையில் மாற்றுத் திறனாளி ஊழியர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கான தீர்வு கள் குறித்தும், இச்சங்கம் செயல்படு வதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கிப் பேசினார். இந்த கூட்டத்தில் 15 பேர் கொண்ட அமைப்புக்குழுவின் கன்வீனராக வி.ராதாகிருஷ்ணன், துணை கன்வீனராக வி.தயானந்தன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து மாற்றுத்திறனாளி தொழிலாளர்களையும் தங்களது சொந்த ஊழியர்களாக அங்கீகரித்திட வேண்டும். மாற்றுத்திறனாளி தொழிலாளர்களுக்கான வேலைத்தன்மையில் (category) மாற்றம் செய்து அவர்க ளுக்கு செய்வதற்குரிய இலகுவான நிரந்தரப் பணி தொடர்ச்சியாக வழங்கிட வேண்டும். நிரந்தர மாற்றுத்திறனாளிக்கான சான்று வைத்திருப்போரை மீண்டும், மீண்டும் மருத்துவ குழுமத்திடம் சென்று மருத்துவ சான்றிதழ் வாங்கிவர வற்புறுத்தக் கூடாது. அனைத்து மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு பிடித்தம் எதுவும் இன்றி முழு ஊர்திப்படியும் உடனடி யாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.