tamilnadu

img

தமிழகத்தில் அரசு வேலைக்காக 28 லட்சம் பெண்கள் காத்திருப்பு

சென்னை, ஜூன் 6- தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக 53.48 லட்சம் பேர்  காத்திருப்பதாக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. இதில், ஆண் பதிவுதாரர்கள் எண் ணிக்கையை காட்டிலும், பெண்  பதிவுதாரர்கள் எண்ணிக்கை அதிகமாகும்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள், மாநில  தொழில் மற்றும் செயல்  வேலைவாய்ப்பு அலுவல கங்கள், சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு அலுவலகம் என பல்வேறு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.  பட்டப்படிப்பு வரையிலான கல்வித்தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், மருத்துவம், பொறியியல், விவசாயம், சட்டம் உள்ளிட்ட தொழிற்  கல்வி படிப்பு தகுதிகளையும்,  பட்ட மேற்படிப்புத் தகுதிகளை யும் மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவ லகத்தில் பதிவு செய்ய வேண்  டும்.

இந்தப் பதிவை 3 ஆண்டு களுக்கு ஒருமுறை புதுப்பித்து  வர வேண்டும். அப்போதுதான்  அந்த பதிவு மூப்பு (சீனியா ரிட்டி) அமலில் இருக்கும். இல்லாவிட்டால் அது காலா வதியாகிவிடும். இந்நிலையில், 2024, மே 31  ஆம் தேதி நிலவரப்படி, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள பதிவுதா ரர்களின் எண்ணிக்கை விவ ரங்களை மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) வெளியிட்டுள்ளார்.

அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்  துள்ள பதிவுதாரர்களின் மொத்த எண்ணிக்கை 53 லட்சத்து 48 ஆயிரத்து 663 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 63 ஆயிரத்து 81. பெண்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 85 ஆயிரத்து 301  ஆகும். மாற்றுப் பாலினத்தவர் 281 பேர். மேலும், பதிவுதாரர்களில் 19 முதல் 30 வயது உள்ள வர்கள் 23 லட்சத்து 27 ஆயி ரத்து 649 பேர். 21 வயது முதல்  45 வயது வரை உள்ளவர்கள் 16 லட்சத்து 93 ஆயிரத்து 40  பேர். 46 வயது முதல் 60 வயது  வரை உள்ளோர் 2 லட்சத்து 47  ஆயிரத்து 811 பேர். பி.எட். படித்த பட்டதாரிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 85  ஆயிரத்து 622 ஆகவும், பி.எட்.  படித்த முதுகலை பட்டதாரி களின் எண்ணிக்கை 2 லட்சத்து  9 ஆயிரத்து 79 ஆகவும் உள்ளது.  

இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு அரசு  வேலைக்காக காத்திருப்ப வர்கள் ஒரு லட்சத்து 45 ஆயி ரத்து 955 பேர். ஐடிஐ முடித்த வர் எண்ணிக்கை ஒரு லட் சத்து 49 ஆயிரத்து 825 ஆக உள்ளது. மேலும், பி.இ., பி. டெக். முடித்துவிட்டு 2 லட்சத்து  37 ஆயிரத்து 525 பேரும், எம்.இ., எம்.டெக். படித்து விட்டு 2 லட்சத்து 6 ஆயிரத்து  544 பேரும் அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.

தற்போது அரசுப் பணி களுக்கு வேலைவாய்ப்பு அலு வலக பதிவு மூப்பு அடிப்படை யில் பணி நியமனம் நடைபெற வில்லை என்றால் போட்டித்  தேர்வெழுதி சான்றிதழ் சரி பார்ப்பில் கலந்து கொள்ளும் போது வேலைவாய்ப்பு அலு வலக பதிவு மூப்பு கேட்கப்படு கிறது. ஒரு சில ஆசிரியர் நிய மனங்களின் போது மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பின் போது  பதிவு மூப்பில் குறிப்பிட்ட அளவு மதிப்பெண் வழங்கப்  படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.