tamilnadu

கோயம்பேட்டில் பூக்கள் விலை அதிகரிப்பு

சென்னை,பிப்.11- சென்னை கோயம்பேட்டில் வரத்து குறைந்து இருந்த நிலையில், பூக்களின் தேவை அதிகரித்ததால் மல்லி, சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்களின் விலையும் திடீ ரென உயர்ந்தது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை மல்லி  ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.700 வரை மட்டுமே விற்கப் பட்ட நிலையில் ஒரு கிலோ மல்லி ரூ.1500 வரை விற்கப்பட்டது. வெளி மார்க்கெட்டில் உள்ள பூ கடைகளில் மல்லி விலை ரூ.2 ஆயிரத்துக்கு மேல் எகிறியது. கன காம்பரம் ரூ.700-க்கு விற்பனையானது.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமந்தி ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.20-க்கு மட்டுமே விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.150 முதல் ரூ.200 வரை விற்கி றது. சம்பங்கி-ரூ.100, அரளி-ரூ.150, சாதி மல்லி- ரூ.800 சாமந்தி-ரூ.150, பன்னீர் ரோஜா- ரூ.100, சாக்லேட் ரோஜா-ரூ.120 விற்பனை யானது.