tamilnadu

img

மத்திய குழுவினர் இன்று சென்னை வருகை

சென்னை, டிச.10- சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புயல் மழை யால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்ய மத்திய குழு வினர் திங்கட்கிழமை (டிச.11) சென்னை வருகின்றனர்.

சென்னை பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் நடை பெற்று வரும் வெள்ள நிவா ரணப் பணிகளை, தமிழக அரசின் தலைமைச் செயலா ளர் சிவ்தாஸ் மீனா ஞாயிறன்று  (டிச.10)  ஆய்வு மேற்கொண் டார். பின்னர் செய்தியாளர் களிடம் இதனைத்தெரிவித்தார்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை வெள்ளப்பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழு திங்கட்கிழமை வருகிறது. செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் அவர்கள் ஆய்வு செய்கின்றனர். 

தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் ஆலோசகர் குணால் சத்யார்தி தலைமையில் ஒரு குழு வருகிறது. அந்த குழுவில் 5 பேர் இடம்பெற்றுள்ளனர். வேளாண்மை, நெடுஞ்சாலை, நிதி, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த 5 பேர் வருகின்றனர். திங்களன்று மாலை வந்துவிட்டு, செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட உள்ளனர்” என்றார்.

சென்னையில் இயல்பு நிலை 
அப்போது சென்னையின் தற்போதையை நிலை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “சென்னை இயல்பு நிலைக் குத் திரும்பிவிட்டது. அத்தியா வசியப் பொருட்கள், பால் விநி யோகம், குடிநீர், போக்குவரத்து என அனைத்தும் சகஜ நிலைக் குத் திரும்பிவிட்டது. குடிநீரைப் பொறுத்தவரை, குழாய்கள் மூலம் வழங்கப்படும் தண்ணீ ரும், லாரிகள் மூலம் விநி யோகிக்கப்படும் தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது. கடைகள் அனைத்தும் திறக் கப்பட்டுள்ளன. அனைத்துப் பகுதிகளிலும் மின் விநியோ கம் சீரான நிலையில் உள்ளது.

சவாலான பணிகள் 
இப்போது இருக்கும் ஒரே சவால், குப்பைகள். டிச.3ம் தேதி முதல் டிச.5ம் தேதி வரை,  புயலின் காரணமாக கனமழை இருந்தது. இதனால், டிச.6ம் தேதியில் இருந்துதான், குப்பை கள் அகற்றும் பணி நடந்து  வருகிறது. அந்த 3 நாட்களில்  வந்த குப்பைகள், வீடுகளுக் குள் தண்ணீர் புகுந்ததால், சேதமடைந்த குப்பைகளும் சேர்ந்துவிட்டது. தனித்தனி குழுக்கள் அமைத்து குப்பை களை அகற்றும்பணி நடந்து  வருகிறது. அதேபோல், தெருக் களில் மழையால் ஏற்பட்ட சேறு சகதிகளை அகற்றுவதும், அந்தப் பகுதிகளில் பிளிச்சிங்  பவுடர் தூவும் பணிகளும் தான் தற்போது போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமைக்குள் இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவுறும். 

இன்று பள்ளிகள் திறப்பு 
திங்கட்கிழமை முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப் பட உள்ளன. கடந்த மூன்று  நாட்களாக பள்ளி கல்லூரி களில் உள்ள சேறு சகதிகள்,  மரங்கள் அகற்றுதல், கழிவ றைகளை சுத்தம் செய்தல்,  குடிநீர் வசதிகளை ஏற்படுத் துதல் உள்ளிட்ட பணிகளை மேற் கொண்டுள்ளோம்” என்றார்.

வேளச்சேரி பள்ளிக்க ரணை பகுதியில்  உள்ள தண்ணீர் ஒக்கிய மதகு வழியாக  சென்று பக்கிங்ஹாம் கால்வாய்க்கு சென்று அங்கி ருந்து முட்டுக்காடு செல்ல வேண்டும்.இதுதான் ஒரே வழி. இந்த நிலையில், அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் வந்தது. ஆனால், இதுபோன்ற அதிகனமழையின் போது என்ன மாதிரியான மழைநீர் வடி கால் கட்டினாலும், தண்ணீர் தேங்கவே செய்யும். ஏற்கெ னவே, ஆலோசனைக் குழு  இது தொடர்பாக நிறைய பரிந் துரைகளை அளித்துள்ளனர். அந்த பரிந்துரைகள் குறித்து ஆலோசித்து, இந்தப் பகுதிக்கு எந்தெந்த மேல் பகுதிகளில் இருந்து தண்ணீர் வருகிறது, என்பதை எல்லாம் பார்த்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்னதாக, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா,  மணலி, எர்ணாவூர், திரு வொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற் கொண்டார். குறிப்பாக, எண்ணெய்ப் படலம் படர்ந் துள்ள பகுதிகளில் அவர் ஆய்வு  மேற்கொண்டார். அப்பகுதி மக்களுக்கு நிவாரண உதவி களை வழங்கினார். மேலும், அப்பகுதிகளில், நடைபெறும் மருத்துவ முகாமினை பார் வையிட்டு ஆய்வு செய்தார்.