tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

கொடி பயணம்:  உற்சாக வரவேற்பு

சிவகங்கை, ஏப்.1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு  மதுரையில் ஏப்ரல் 2 -6 தேதிகளில் மதுரையில் நடைபெறுகிறது. ஏப்ரல் 6 ஆம் தேதி 25 ஆயிரம் செந்  தொண்டர்களுடன் 5 லட்சம் பேர் பங்கேற்கும் பேரணி நடைபெறுகிறது. இதையொட்டி வெண்மணியிலிருந்து தியாகிகள் நினைவுக் கொடி பயணம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் புறப்பட்டு, செவ்வாயன்று திருப்பத்தூர் வந்த டைந்தது. திருப்பத்தூரில் சிவகங்கை மாவட்டச் செயலாளர் மோகன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக் கப்பட்டது. மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் முத்துராமலிங்க பூபதி, கருப்புசாமி, சேதுராமன், ஆறுமுகம், திருப்பத்தூர் தாலுகா செய லாளர் முருகேசன்,  சிங்கம்புணரி தாலுகா செயலாளர் காந்திமதி, காரைக்குடி தாலுகா செயலாளர் அழகர்சாமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் சாந்தி, பொன்னுச்சாமி, பாலு  மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை அரண்மனை வாசலில்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணி யம்மா தலைமையில் வரவேற்பு அளிக்கப் பட்டது. மாவட்டச் செயலாளர் மோகன், மாநிலக் குழு உறுப்பி னர்கள் ஜெயசீலன், சாமி.நடராஜன், தஞ்சாவூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி ஆகி யோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

எழுச்சிமிகு வரவேற்பு விருதுநகர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்.2 முதல் 6 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநாட்டில் தியாகிகள் நினைவு ஜோதிகளை பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தின் மாணவர் அமைப்பின் மகத்தான தியாகிகளான தோழர்கள் சோமு - செம்பு  நினைவு ஜோதி கோவில்பட்டி வழியாக விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர்.நகருக்கு வருகை தந்தது. அங்கு எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.