tamilnadu

img

தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

தமிழ்நாட்டில் அமுதா ஐ.ஏ.எஸ், அதுல் ஆனந்த் ஐ.ஏ.எஸ், சுதீப் ஜெயின் ஐ.ஏ.எஸ், காகர்லா உஷா ஐ.ஏ.எஸ், அபூர்வா ஐ.ஏ.எஸ் ஆகிய 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு முதன்மை செயலாளர் பதவியில் இருந்து கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அரசாணையில், கடந்த 1994ஆம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகளான, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை முதன்மைச் செயலாளர் அதுல் ஆனந்த், மத்திய அயல் பணியில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சுதீப் ஜெயின்,  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் அபூர்வா ஆகியோர் கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.