சென்னையில் முதன்முறையாக ‘ஏசி’ மின்சார ரயில் சேவை துவக்கம்
சென்னை,ஏப்.19- சென்னையில் முதன்முறையாக ‘ஏசி’ மின்சார ரயில் சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயங்கத் தொடங்கி யுள்ளது. சென்னை ஐ.சி.எப்., ஆலையில், தயாரிக்கப்பட்ட 12 பெட்டிகள் கொண்ட முதல் ‘ஏசி’ மின்சார ரயிலில் அமர்ந்த படி 1,116 பேரும், நின்று கொண்டு 3,798 பேரும் என மொத்தம் 4,914 பேர் பய ணிக்க முடியும்.
குளிர்சாதன புறநகர் ரயில்கள் விவரம்
.ரயில் எண் - 49003: காலை 7 மணிக்கு இயக்கப்படும் குளிர்சாதன மின்சார ரயில் சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கி மலை, திரிசூலம், தாம்பரம், பெருங்க ளத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனூர் வழி யாக காலை 8.35 மணிக்கு செங்கல் பட்டுக்கு வந்தடையும். ரயில் எண் - 49004: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து காலை 9 மணிக்கு கிளம்பும் ரயில் பரனூர், சிங்கப்பெருமாள் கோவில், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், தாம்பரம், திரிசூலம், பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், எழும்பூர் வழி யாக சென்னை கடற்கரை ரயில் நிலைய த்திற்கு காலை 10.30 மணிக்கு வந்தடை யும். ரயில் எண் - 49005: சென்னை கடற் கரை ரயில் நிலையத்திலிருந்து மதியம் 3.45 மணிக்கு புறப்பட்டு மேற்கண்ட வழிகளில் செங்கல்பட்டு ரயில் நிலை யத்திற்கு மாலை 5.25 மணிக்கு வந்த டையும். ரயில் எண் - 49006: செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும். ரயில் எண் - 49001: சென்னை கடற் கரை ரயில் நிலையத்திலிருந்து இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக் கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதா ப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை, பழவந்தாங்கல், மீனம்பாக்கம், திரி சூலம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், சானிடோரியம் வழியாக தாம்பரம் ரயில் நிலையத்திற்கு இரவு 8.30 மணிக்கு வந்தடையும். ரயில் எண் - 49002: தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு தாம்பரம், சானி டோரியம், குரோம்பேட்டை, பல்லா வரம், திரிசூலம், மீனம்பாக்கம், பழ வந்தாங்கல், பரங்கிமலை, கிண்டி, சைதாப்பேட்டை, மாம்பலம், கோடம் பாக்கம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, சென்னை எழும்பூர் வழியாக சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு காலை 6.45 மணிக்கு வந்தடையும் என தெற்கு ரயில்வே தரப்பில் அறிவிக்கப்ப ட்டுள்ளது இந்த ரயில் அதிகாலையில் தாம் பரம் பணிமனையில் இருந்து புறப் ்பட்டு கடற்கரை வந்தடையும் போதும், இரவில் கடற்கரையில் இருந்து தாம்பரம் பணிமனைக்கும் செல்லும் போதும் புறநகர் பாதையில் இயக்க ப்படும். பிரதான பாதையில் செல்லும் போது, இந்த ரயில் கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கி மலை, தாம்பரம், பெருங்களத்துார், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப் பெருமாள் கோவில், பரனுார் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
சீசன் பாஸ் செல்லாது
இந்த ரயில் குறைந்தபட்சமாக ரூ.35-ம், அதிகபட்சமாக ரூ.105ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின்சார ரயில் முதல் வகுப்பு சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் இந்த ரயிலில் பயணிக்க அனுமதி கிடையாது. இந்த ரயிலுக்காக தனி கட்டண அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில் நிலையம் கட்டணம்
சென்னை கோட்டை ரூ.35
சென்னை பூங்கா ரூ.35
எழும்பூர் ரூ.35
மாம்பலம் ரூ.40
கிண்டி ரூ.60
பரங்கிமலை ரூ.60
திரிசூலம் ரூ.60
தாம்பரம் ரூ.85
பெருங்களத்தூர் ரூ.85
கூடுவாஞ்சேரி ரூ.90
பொத்தேரி ரூ.90
சிங்கபெருமாள்கோயில் ரூ.100
பரனூர் ரூ.105
செங்கல்பட்டு ரூ.105