சென்னை, ஜூன் 11 - ஒப்பந்த தொழிலாளர் களுக்கு மாதத்தின் முதல் வாரத்தில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவரிடம் சிஐடியு வலியுறுத்தியது. ஐசிஎப் தொழிற்சாலை யில் 400க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்து 500 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்த தொழிலாளர்களின் சட்ட உரிமைகளுக்காக ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) தொடர் இயக்கங்களை நடத்தி வரு கிறது. இந்த நிலையில், தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் எம்.வெங்கடேசன் திங்க ளன்று (ஜூன் 10) ஐசிஎப் தொழிற்சாலையில் ஆய்வு செய்தார். அப்போது அவரி டம் ஐசிஎப் யுனைடெட் கான்ட்ராக்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செய லாளர் என்.வி.கிருஷ்ணா ராவ், யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலா ளர் பா.ராஜாராமன், பொரு ளாளர் கே.டி.ஜோஷி ஆகி யோர் சந்தித்து மனு அளித்த னர்.
அப்போது, மிகுந்த தாம தமாக மாத ஊதியம் வழங்கு வதை தவிர்த்து, முதல் வாரத் திலேயே தேதி நிர்ணயித்து வழங்க வேண்டும். பிஎஃப் , இஎஸ்ஐ, பிடித்தம் விவர மான சம்பள ரசீது, அகவிலை ப்படி வழங்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். ஐசிஎப்-ல் ஒப்பந்த ஊழியர் என்கிற முறையில் அடையாள அட்டை வழங்க வேண்டும். சுரண்டலை தடுக்க தொழிலாளர்களின் எண்ணிக்கை நிர்ணயித்து ஒப்பந்தம் விட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து ஐசிஎப் அதிகாரிகள், ஒப்பந் ததாரர்கள், ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நேரில் அழைத்து ஆணைய தலை வர் பேசினார். அப்போது, சட்ட ரீதியான குறைந்தபட்ச ஊதியம், போனஸ், காப்பீடு, பிஎஃப், இஎஸ்ஐ, சம்பள ரசீது, சீருடை உள்ளிட்ட சலுகை கள் முறையாக அமலாக்கப் படாதது போன்றவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் நிர்வாகத் திற்கு ஒத்துழைக்காத ஒப்பந்ததாரர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.