tamilnadu

img

இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை திட்டம்

சென்னை, ஜூலை 6- இந்தியாவில் முதல் முறையாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தை சென்னை யில் உள்ள தனியார் மருத்துவ   மனை அறிமுகம் செய்துள்ளது.  பெரும்பாக்கத்தில் உள்ள கிளெனேகிள்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவ மனையில் இந்த திட்டத்தை சென்னை மாநக ராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.  

கருப்பை மாற்று அறுவை சிகிச்சை, ரோபோட்டிக் மகப்பேறு துறை, மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், கருவுறுதல் மருத்துவப் பிரிவு இயக்குனர் டாக்டர் பத்மப்ரியா விவேக் மற்றும் உலக அளவில் 50க்கும் மேற்பட்ட வெற்றிகரமான கருப்பை மாற்று அறுவை சிகிச்சையை வழிநடத்தி உள்ள டாக்டர் மேட்ஸ் பிரான்ஸ்ட்ரோம் தலை மையிலான குழு இந்த சிகிச்சையை வழங்க உள்ளது.  இந்த திட்டம் இந்தியாவில் குழந்தைப் பேறு இல்லாத பெண்க ளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜெ. ராதா கிருஷ்ணன், ஆரோக்கிய மான குழந்தைகளை கருத்தரிக்க மற்றும் பிரசவிக்க விரும்பும் பெண்களுக்கு புதியதொரு நம்பிக்கையை இது தருகிறது. இந்த சிகிச்சை யின் வெற்றி விகிதம் வருங்காலத்தில் நல்ல தொரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.  டாக்டர் பத்மப்ரியா விவேக் கூறுகையில், புற்றுநோய் அல்லது மகப்பேறியல் ரத்தக்கசிவு போன்ற பல்வேறு மருத்துவக் காரணங்களால் கருப்பை இல்லாத அல்லது செயல் படாத கருப்பை உள்ள பெண்களுக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை, ஒரு நம்பிக்கை மிகுந்த சிகிச்சையாக மாறி வருகிறது என்றார்.