tamilnadu

img

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு உண்டு:அமைச்சர்

சென்னை:
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தீபாவளியின் போது பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்படும் என்றுஅமைச்சர் கே.சி. கருப்பணன் தெரிவித்துள்ளார். சென்னை யில் அமைச்சர்  செய்தியாளர்களிடம்கூறியதாவது:
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடு கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படும். அந்த நேரக் கட்டுப்பாடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இந்த ஆண்டும் புதுமையாக பல்வேறு பட்டாசு ரகங்கள் வந்திருப்பதாலும், சுற்றுச்சூழலுக்கு அதிக மாசுபாடு ஏற்படுத்தாத பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி தரப்படும்.அதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. உடலுக்கு கடுமையான தீங்குகளை விளைவிக்கக் கூடிய அஜினமோட்டோ என்னும் வேதிப்பொருளை தமிழகத்தில் தடை செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து உரிய முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

;