திருவொற்றியூரில் எருமை மாடு முட்டி படுகாயமடைந்த பெண்ணிற்கு சிகிச்சை அளிக்க அரசும், மாநகராட்சியும் முன்வர வேண்டும் என்று அந்த பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் மருத்துவ செலவிற்காக 1 லட்சம் ரூபாயை அந்த பெண்ணின் கணவர் வினோத்திடம் வழங்கினார்.