tamilnadu

img

ஆன்லைனில் இறுதி செமஸ்டர் தேர்வு: எந்தச் சிக்கலும் இல்லை அண்ணா பல்கலை. அறிவிப்பு

சென்னை:
இறுதி பருவத் தேர்வை எழுதும் மாணவர்கள் அனைவரிடமும் ஆன்ட்ராய்டு செல்போன் வசதி இருக்கிறது என்றும், இறுதி பருவத் தேர்வு நடத்துவதற்கு எந்தச் சிக்கலும் இல்லை என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.பொறியியல் படிப்புகளுக்கான இறுதி பருவத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. அதன்படி வருகிற 22 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலும் ஆன்லைனில் தேர்வு நடைபெற இருக்கிறது.இதற்கான மாதிரி தேர்வு செப்டம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் ஆன்லைனில் தேர்வு நடத்துவதால் கிராமப்புற மாணவர்கள் எப்படி எழுதுவார்கள்? என்று பேசப்பட்டது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் இதுபற்றி ஆய்வு நடத்தியதாக கூறப்படுகிறது. அதன்அடிப்படையில் சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.அதன்படி, இறுதி பருவத் தேர்வை எழுதும் மாணவர்கள் அனைவரிடமும் ஆன்ட்ராய்டு செல்போன் வசதி இருக்கிறது என்றும், தேர்வு நடத்துவதற்கு எந்தச் சிக்கலும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஒரு மணி நேரம் ஆன்லைனில் நடைபெறும் இந்த தேர்வு கொள்குறி வகை வினாக்களாக தான் இருக்கும் என்பதால் ஆன்ட்ராய்டு செல்போனில் எளிதாக மாணவர்கள் பதில் அளித்துவிடுவார்கள் என்பது அண்ணா பல்கலைக்கழகத்தின் கருத்தாக இருக்கிறது.24 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரைக்கும் நடைபெறும் இந்த தேர்வு காலை காலை 10 மணி முதல் 11 மணி வரை, பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை, மதியம் 2 மணி முதல் 3 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை என 4 கட்டங்களாக நடைபெறுகிறது.

;