செங்கல்பட்டு, டிச. 6- வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல்பூங்கா தென்கிழக்கு ஆசியாவி லேயே மிகப்பெரியஉயிரி யல் பூங்காவாக செயல் பட்டு வருகின்றது. உலக உயிரி யல் பூங்கா மற்றும் மீனகம் சங்கத்தில் உறுப்பினராகவும் விளங்குகிறது. பூங்காவில் இயங்கி வரும் பூங்காப் பள்ளியின் மூலம் பூங்கா குறித்த கல்வியோடு இயற்கை மற்றும் வன உயி ரின பாதுகாப்பின் முக்கிய துவத்தை பல் வேறு நிகழ்ச்சி கள் மூலம் மக்களுக்கு கொண்டு செல்கின்ற பணி யில் ஈடுபட்டுள்ளது. பசுமைத் திறன் மேம் பாட்டு திட்டத்தின் கீழ் சுற்றுச் சூழல் துறையுடன் இணைந்து பறவைகள் கண்டறிதல் மற்றும் அடிப் படை பறவையியல் குறித்து சான்றிதழ் வகுப்புகளை பூங்காவில் பயிற்சி அளிக்கப் பட்டது. இப்பயிற்சியில் பற வைகள் குறித்த முன்னோட் டம், பரிணாமம், வரலாறு, வகைப்பாடு, தகவமைப்பு கள், வாழிடம்,நடத்தை, பல்லுயிர்ப்பரவல், பறவை கள் சந்திக்கும் இடர்பாடு கள், பாதுகாப்பு, பறவை களை இனங் கண்டறிதல், சுற்றுலா போன்ற தலைப்பு களில் வகுப்புகள் 24 நாட்கள் நடத்தப்பட்டது. பயிற்சியின் நிறைவாக சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பூங்காப் பள்ளி கலையரங்கில் வெள்ளி யன்று நடைபெற்றது. சுற்றுச்சூழல்துறை கூடுதல் இயக்குநர், மு.கீதாஞ்சலி, துணை இயக்குநர் மசுதா ராமன், பூங்கா உதவி இயக்கு நர் மு.சேகர், உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கினர்.