tamilnadu

பெண் மருத்துவர் பாலியல் வன்கொலை

சென்னை, ஆக. 21 - கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் படுகொலையைக் கண்டித்து ஆகஸ்ட் 24 அன்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு (சிஐடியு) அழைப்பு விடுத்துள்ளது.

உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநிலக் குழு கூட்டம், புதனன்று சென்னை யில் ஐடா ஹெலன் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் க. திருச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநில அமைப்பாளர் எம். தனலட்சுமி சமர்ப்பித்த வேலை அறிக்கையின் மீது, தமிழகத்தில் மொத்த உழைப்பாளிகளில் 47 சதவிகிதம் பெண்களாக உள்ள நிலையில், இவர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பணியிடத்தில் ஏற்படும் பிரச்சனைகள், ஆண்களுக்கு இணை யான ஊதியம், பாலியல் புகார் கமிட்டி, பணிப் பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இவற்றின் அடிப்படையில், செப்டம்பர் முதல் வாரத்தில் அரசு தலைமைச் செயலக அதிகாரி களை சந்தித்தும், மாவட்ட ஆட்சியரை சந்தித்தும் கோரிக்கை மகஜர் கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை மற்றும் பல்வேறு இடங்களில் நடக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை களைக் கண்டித்து, மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.