tamilnadu

img

விமான நிலையத்திற்கு விவசாயிகள் ஒப்புதல் இன்றி நிலம் எடுக்கக் கூடாது

சென்னை,அக்.13- பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் சுற்றுவட்டார கிராம மக்கள் அக்டோ பர் 13 ஞாயிறன்று தங்களது வீடு களில் கறுப்புக்கொடி கட்டி போராட்டத் தில் ஈடுபட்டனர். நெல்வாய், பரந்தூர், ஏகனாபுரம், நாகப்பட்டு, வளத்தூர் தண்டலம் ஆகிய கிரா மங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கருப்புக் கொடி யேற்றி கண்டனத்தை வெளிப்படுத்தி னர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலத் தலை வர் பெ.சண்முகம் செய்தியாளர்களி டம் பேசியதாவது:

விவசாயிகளின் வாழ்வாதா ரமான பல்லாயிரக்கணக்கான வேளாண் விளை நிலங்களையும் 13 ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை அழித்தும், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை முற்றிலும் காலி செய்து பரந்தூரில் புதிதாக ஒரு விமான நிலை யம் அமைப்பது என்று ஒன்றிய-மாநில அரசுகள் முடிவு செய்திருப் பது வன்மையான கண்டனத்துக்கு உரியது.விவசாயிகளின் வாழ்வாதா ரமான பல்லாயிரக்கணக்கான வேளாண் விளை நிலங்களையும் 13 ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை அழித்தும், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை முற்றிலும் காலி செய்து பரந்தூரில் புதிதாக ஒரு விமான நிலை யம் அமைப்பது என்று ஒன்றிய-மாநில அரசுகள் முடிவு செய்திருப் பது வன்மையான கண்டனத்துக்கு உரியது.

2013 ஆம் ஆண்டு நிலம் கையகப் படுத்தும் சட்டத்தை பயன்படுத்து வதற்கு பதிலாக, 1997 ஆம் ஆண்டு தொழிற்சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் கீழ் பரந்தூர் பகுதியில் நிலத்தை எடுப்ப தாக அரசு அறிவித்திருப்பது சட்ட விரோதமானது. 2013 ஆம் ஆண்டு சட்டம் தான், 70 விழுக்காடு விவசாயி கள் ஒப்புதல் கொடுக்காமல் நிலத்தை கையகப்படுத்த முடியாது என்கிறது. இந்த சட்டம் இழப்பீடு உள்ளிட்ட பிரச்சனைகளிலும் ஒரு நியாயமான இழப்பீடு என்பதற்கும் வழி வகை செய்கிறது.

விவசாயிகள் அனுமதியின்றி, கிராம மக்களின் ஒப்புதல் இல்லா மல் ஒருவரைக்கூட வெளியேற்றம், அப்புறப்படுத்தல் போன்ற எந்த நட வடிக்கையாக இருந்தாலும் அதை தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் சுற்றுவட்டார 13 கிராம விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஈடுபடும்.

இவ்வாறு அவர் கூறினார்