tamilnadu

img

ஃபானி புயல் மிக நெருங்கி வந்தால் மட்டுமே தமிழகத்தில் 30-ம் தேதி மழை -வானிலை ஆய்வாளர் செல்வகுமார்

ஃபானி புயல் மிக நெருங்கி வந்தால் மட்டுமே தமிழகத்தில் 30-ம் தேதி மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தின் பல இடங்களில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலை இந்திய பெருங்கடல் - வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 36 மணி நேரத்தில் வலுப்பெற்று மத்திய இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய தெற்கு வங்க கடல் பகுதி நோக்கி நகரும். பின்னர் மேலும் வலுப்பெற்று புயல் சின்னமாக மாறி தமிழக மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதன் காரணமாக வரும் 28,29 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தென் தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;