சென்னை, ஜூன் 14- கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து தொகுப்பு டெண்டர் விடுவது செவ்வா யன்று (ஜூன் 14) இறுதி செய்யப்பட் டுள்ளது. இதில் தமிழக பாஜக தலை வர் அண்ணாமலை புகார் கூறி இருந்த அனிதா டெக்ஸ்காட் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்படவில்லை. அதற்கு பதில் ஸ்ரீபாலாஜி சர்ஜி கல் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப் பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பி ரமணியன் கூறினார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், கர்ப்பிணி களுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் குறித்து காழ்ப்புணர்ச்சியுடன் அண்ணாமலை குற்றச்சாட்டு கூறி யுள்ளார். ஆதாரம் இல்லாமல் குற்றச் சாட்டுகளை கூற வேண்டாம். நியாய மான முறையில் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும். அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் துறை ரீதியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 2019ஆம் ஆண்டை காட்டி லும் குறைவான தொகைக்கு டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம் டெண்டர் நியாயமான முறையில் விடப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.