tamilnadu

img

சென்னை பிராட்வேயில் போலி  டோனர்கள் பறிமுதல்  

 

சென்னை, ஜன. 16- பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக டோனர்கள் தயாரித்து விற்பனை செய்ததை காவல்துறையின் அறிவுச்சொத்துரிமை பிரிவினர் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். பிரட்வே சவரிமுத்து சந்தில் உள்ள ரேபிட் இந்தியா என்ற நிறுவனத்தில் கேனான் நிறுவனத்தின் பெயரில்போலியாக தயாரிக்கப்பட்ட டோனர்கள் விற்பனை செய்யப்படுவதாக  கேனான் நிறுவனத்தின் சார்பில்  சி 31 கன்சல்டன்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாளர்  கிருஷ்ணன் புகார் செய்தார். இதையடுத்து அறிவுச் சொத்துரிமை பிரிவு காவல்துறை ஆய்வாளர்  தங்கராஜ்  தலைமையிலான காவலர்கள் அந்த கடையில் சோதனை நடத்தி போலியான டோனர்களை பறிமுதல் செய்தனர்.போலி டோனர்களை தயாரித்தல், இருப்பு வைத்தல், விற்றல் ஆகியவற்றுக்காகவும் காப்புரிமை சட்டத்தை மீறியதற்காகவும்  அந்த நிறுவனத்தின் மீது  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

;