சென்னை, ஆக.18- தமிழகத்தில் மின் கட்டணத்தை மின் வாரியத்தின் அதி காரப்பூர்வ இணைய தளம் வாயிலாகவும், ஆன்லைன் செயலி வாயிலாகவும் செலுத்துவோர் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. சில மோசடி கும்பல்கள் இதை சாதகமாக பயன்படுத்தி சைபர் குற்றச் செயலில் ஈடுபட முயற்சித்து வரு கின்றன.
சமீபத்தில் மின் நுகர்வோர்களுக்கு, ‘உங்கள் பழைய மாத மின் கட்டணம் சரி செய்யப்படாததால் இன்றிரவு உங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும். இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செயலியை பயன்படுத்துங்கள்’ என போலியான குறுஞ்செய்தி பரவுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் தன்னுடைய அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
நுகர்வோர்கள் ஜாக்கிரதை. தூண்டி லில் சிக்க வேண்டாம். இது மின் கட்டண மோசடியில் புது அவதாரம். உங்கள் பழைய மாத மின் கட்டணம் சரி செய்யப் படாததால், இன்றிரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும். இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செயலியை செயல்படுத்து குறைந்தபட்ச ரூ.03 அல்லது தகவல்களை தரவும் என குறுஞ்செய்தி வந்தால், அதை பொருட்படுத்தாதீர்.
பதற்றப்படாமல், முதலில் உங்கள் மின் கட்டண நிலையை, மின்வாரிய அதிகாரப்பூர்வ இணையதளம் https://tnebltd.gov.in மற்றும் செயலியில் சரிபார்க்கவும்.
எஸ்.எம்.எஸ். வாயிலாக வந்த செயலி யை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இதுதொடர்பான, சைபர் குற்ற எண் 1930-ல் புகார் அளிக்கவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.