tamilnadu

img

அதிக வெப்பத்தால் அசெளகரியம் ஏற்படலாம்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3˚ டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34˚ செல்சியஸை ஒட்டி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கியதையடுத்து, கடந்த சில நாட்களாக வெயில் உச்சத்தைத் தொட்டு வருகிறது. குறிப்பாக நாமக்கல், ஈரோடு, சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. பல மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது.சென்னையிலும் நேற்று 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த வருடத்தில் நேற்று அதிக வெப்பமான நாட்களில் ஒன்றாக இருந்தது. நேற்று 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை கடந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று மீனம்பாக்கத்தில் மாநிலத்திலேயே அதிக வெப்பம் பதிவாகியிருந்தது. இன்றும் அதைவிட அதிக வெப்பம்நிலையுடன் மீனம்பாக்கம் இருக்க வாய்ப்பு உள்ளது. புறநகர்ப்பகுதிகளில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தொடலாம். இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.