tamilnadu

சென்னையிலிருந்து  வெளிநாடுகளுக்கு புற்றுநோய் மருந்துகள் ஏற்றுமதி

 சென்னை,மார்ச் 12- சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவ ரும் ஒரு முன்னணி தனியார் துறை நிறுவனமான அக்கார்டு  குரூப், மருந்து தயாரிப்பு மற்றும் வினியோக தொழில்துறை யில் கால்பதிக்கிறது.  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிறுவனத்தின்  துணைத்தலைவர் சதீஷ் சிங் மற்றும் தலைமை செயல் அதி காரி  மனிஷ் சுபே ஆகியோர்  சென்னை ஓரகடத்தில் உள்ள  ஆலையில் தயாரிக்கப்படும் இரத்த புற்றுநோய், மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் மருந்துகளை அமெ ரிக்கா, ஐரோப்பா உள்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாக கூறினர்.அடுத்த ஆண்டிலிருந்து பல்வேறு  மருந்து தயாரிப்பு பொருட்களை அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். “புற்றுநோயியல் சார்ந்த மருந்துகள் மற்றும் பிற மருந்து களுக்கான உருவாக்கம் மற்றும் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களுடன் கூட்டாக செயல்பட உள்ளதாகவும் அவர்கள் மேலும் கூறினர்.

;