tamilnadu

img

கல்லூரி மாணவர்கள் அரியர் தேர்வு எழுத விலக்கு

சென்னை:
கல்லூரி இறுதி பருவத் தேர்வுகளை தவிர பிற பருவப்பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண் கள் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கொரோனா நோய் தொற்று காரணமாக, உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் அமைக்கப் பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும், பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணவர்கள். பலவகை தொழில் நுட்பக் பட்டயப் படிப்பு பயிலும் மாணவர்கள். முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள்.இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண் டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள். முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள். அதேபோன்று, எம்.சி.ஏ. முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர் வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல 23.7.2020 அன்று உத்தரவிட்டிருந்தேன்.  அதன் அடிப்படையில், உயர்கல்வித்துறை 27.7.2020 அன்று விரிவான வழிகாட்டுதல் களை வழங்கி அரசாணை வெளியிட்டது.

தற்போது மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவப்பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணாக்கர்கள் பல்கலைக்கழக மானியக்குழு  மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப் பெண்கள் வழங்கப்படும். இது குறித்து விரிவான ஒரு அரசாணையை வெளியிட உயர்கல்வித் துறைக்கு  உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

;