tamilnadu

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை

சென்னை, ஜூலை 9- கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள  அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டும் என்று  தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவர்  பா.ஜான்சிராணி, பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் ஆகியோர் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் உள்ள மனநோயாளிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. காப்பகத்தில் உள்ள 20 வார்டுகளில் சுமார் 900 நோயாளி கள் உள்ளனர்.  போதிய பாதுகாப்பு ஏற்பாடு கள் இல்லாததால், இங்குள்ள ஊழியர்கள் மூலம் கொரோனா பரவி உள்ளது. வார்டு எண்-9ல் சுமார் 29 பேரும், வார்டு  எண்-2 மற்றும் 6ல் சிலரும் பாதிக்கப்பட்டுள்ள னர். இவர்களில் தீவிர தொற்று பாதித்த 5 பேர்  ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காப்ப கத்தில் உள்ளவர்களில் 30 சதவீதம் பேர் முதிய வர்களாகவும், சுமார் 50 சதவீதம பேர் நீரிழிவு,  இரத்த அழுத்தம் உள்ளிட்ட வேறு சில நோய்  பாதித்தவர்களாகவும் உள்ளனர். இவர்களில் சளி, காய்ச்சல் இருக்கும்  நோயாளிகள் மட்டுமே பரிசோதிக்கப்படு கின்றனர். மாறாக, காப்பகத்தில் உள்ள மன நோயாளிகள் அனைவருக்கும் ஒரே நேரத்தில்  பரிசோதனை செய்யவும், தொற்று ஏற்படா மல் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.