tamilnadu

ராகுலின் பாதுகாப்பை உறுதி செய்க! ஒன்றிய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

சென்னை,செப்.18- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய  வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி யுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுத்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

 பாஜக தலைவர் ஒருவர், “ராகுல் காந்தி யின் பாட்டிக்கு நேர்ந்த கதிதான் அவருக்கும் நேரும்” எனவும், ஷிண்டே சேனாவின் சட்ட மன்ற உறுப்பினர் ஒருவர் “ராகுல் காந்தி யின் நாக்கை அறுப்பவருக்குப் பரிசு” எனவும் மிரட்டல் விடுத்திருப்பதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன.

எனது சகோதரர் ராகுல் காந்தியை நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவதும், நாளுக்கு நாள் அவருக்கு கூடி வரும் பொதுமக்களின் ஆதரவும் பலரையும் மிரளச் செய்துள்ள தன் தொடர்ச்சியாக இத்தகைய அச்சுறுத்தல் கள் விடுக்கப்படுகின்றன.மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய் யும் வகையில் ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, அச்சுறுத்தலுக்கும் வன்முறைக்கும் நமது மக்களாட்சியில் இட மில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய் யும் வகையில் ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, அச்சுறுத்தலுக்கும் வன்முறைக்கும் நமது மக்களாட்சியில் இட மில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.