சேலம், ஜூன் 26- அரசு போக்குவரத்து பணிகளில் எட்டு மணி நேர வேலையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் சேலம், நாமக்கல் மாவட் டத்தில் போக்குவரத்து பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழி லாளர்களுக்கு எட்டு மணி நேர வேலையை உத்தரவாதப் படுத்த வேண்டும். ஓட்டு நர், நடத்துனரை வாரக்கணக்கில் தொடர்ந்து பணியாற்ற நிர்பந்திக்கக் கூடாது. டீசல் சிக்கனம் என்று ஓட்டுநரை வதைக்க கூடாது. வசூல் குறைவு என்ற பெயரில் நடத்துனரை தரக்குறைவாக நடத்தக் கூடாது. தொழில்நுட்ப பிரிவில் பேருந்து பராமரிப்பை மேம்படுத்த வேண்டும். தொழில்நுட்ப பணியாளர்கள் குடிநீர் பாட்டிலை இறக்க சொல்லி கட் டாயப் படுத்தக்கூடாது என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி புதனன்று தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், எருமாபாளையம் பணிமனை முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார். சிஐடியு மாநில குழு உறுப்பினர் எஸ்.கே.தியாகராஜன் சிறப்புரையாற்றி னார். சிஐடியு மாவட்ட செயலாளர் உதய குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இதேபோல், ஆத்தூர் பணிமனையில் சம்மேளன செயலாளர் டி.செல்வகுமார், பொதுச் செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேட்டூர் பணிமனை முன்பு சங்கத்தின் கிளை யில் தலைவர் கே.செம்பன், மாவட்ட பொருளாளர் வி.இளங்கோ, சம்மேளன குழு உறுப்பினர் பி.முருகேசன் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் தர்ணா போராட்டத்தில் பங்கேற்றனர்.
நாமக்கல்
நாமக்கல் அரசு போக்குவரத்து பணி மனை முன்பு நடைபெற்ற தர்ணா போராட் டத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சிஐடியு கோட்டை துணைச்செயலாளர் எஸ்.செந்தில்குமார் தலைமை வகித்தார். தர்ணா போராட் டத்தை சம்மேளன குழு உறுப்பினர் பி. சிங்காரம் துவக்கி வைத்து பேசினார். சாலைப் போக்குவரத்து சம்மேளன மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாக ராஜன் கோரிக்கைகளை விளக்கி சிறப் புரையாற்றினார். தர்ணா போராட்டத்தில் சிஐடியு நாமக்கல் மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி உள்ட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.