tamilnadu

img

சூரிய கிரகணத்தை கண்டு மகிழ வாருங்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அழைப்பு

சென்னை, டிச. 24 - தேநீருடன் வளைய சூரிய கிரகணத்தை காண வருமாறு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. டிச.26 அன்று வளைய சூரிய கிரகணம் நடைபெறு கிறது. சூரியனை விட நிலவு சிறியது என்பதால், நிலா முழுமையாக சூரியனை மறைக்க முடியாது. எனவே, நிலவு சூரியனை மறைக்கு ம்போது அதன் மையப்பகுதி மட்டும் மறையும். விளிம்பு பகுதி தீ வளையம் போல காட்சியளிக்கும். எனவே, இதை வளைய சூரிய கிரகணம் என்படுகிறது. டிச.26 அன்று காலை 8 மணிக்கு தொடங்கி 11.16 வரை வளைய சூரிய கிரணம் நிகழும். சூரியனின் மேற்கு திசையில் முதலில் நிலவு மறைக்கத் துவங்கும். கொஞ்சம் கொஞ்சமாக சூரிய பிம்பம் மறைந்து பின்னர் 11.16 மணிக்கு நிலவு விலகும். சூரியனை சாதாரண மாகவே நேரடியாக பார்த்தால் கண் அயற்சி ஏற்டும். ஆகவே, சூரிய கிரண கத்தை வெறும் கண்ணால் பார்க்க கூடாது. எனவே, ஒலி வடிகட்டி கண்ணாடி கள், ஊசிதுளை கேமிரா, தொலைநோக்கி, பைனா குலர் போன்ற கருவிகள் மூலம் சூரியகிரகணத்தை பார்க்கலாம். கண்கண்ணாடி, பைனாகுலர், தொலை நோக்கி, புகைப்படக்கருவி, வெல்டிங்கண்ணாடி, எக்ஸ்-ரே போன்றவற்றின் மூலம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ள னர். இந்த வளைய சூரிய கிரகணத்தை காண தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. குறைந்த விலையில் ஒளி வடிகட்டி கண்ணாடிகளை விநியோகித்து வருகிறது. சென்னையில் பெசன்ட்நகர் கடற்கரையில் காலை 8 மணி முதல் 11 மணி வரை சூரிய கிரகணத்தை லட்சம் பேர் காண ஏற்பாடு செய்துள்ளது. மூட நம்பிக்கையை போக்கும் வகையில் “கிரகண தேநீர் விருந்து”க்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.