பொறியியல் படிப்பு: இன்று பொதுப் பிரிவு கலந்தாய்வு
சென்னை, ஜூலை 28- தமிழ்நாட்டில் நடப்பு கல்வி யாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கையில் முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், சிறந்த விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 22 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற்றது. 22, 23 ஆகிய நாட்களில் சிறப்பு பிரிவில் அரசு பள்ளி மாணவர்க ளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதற்கு மொத்தம் 710 இடங்கள் ஒதுக்கப் பட்டிருந்தன.
ஆனால் இந்த கலந்தாய்வு மூலம் 92 இடங்கள் நிரம்பின. கல்லூரியை தேர்வு செய்து உறுதிப்படுத்திய மாணவர்க ளுக்கு 23 ஆம் தேதி இரவு இணைய வழியில் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிறப்பு பிரிவினருக்கான பொது கலந்தாய்வு 25 ஆம் தேதி தொடங்கி சனிக் கிழமை முடிவடைந்தது. மாணவர்க ளுக்கான ஒதுக்கீட்டு ஆணை ஞாயிற்றுக் கிழமை வழங்கப்பட்டது .
இந்த நிலையில், ஏற்கனவே அறி விக்கப்பட்டபடி பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 29 திங்கட்கிழமை தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து வருகிற செப்டம்பர் 3 ஆம் தேதி வரை நடைபெறும் இக்கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடத்தப்படுகிறது
இதேபோன்று தொழிற் கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் இன்று தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 10 ஆம் தேதி வரை நடை பெறும் இந்த கலந்தாய்வு ஒரே சுற்றாக நடத்தப்படுகிறது. கலந்தாய்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள் ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் டி.புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.
1,355 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு விழா
சென்னை, ஜூலை 28- முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை யில் திமுக ஆட்சி அமைந்த பிறகு 1,355 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ரூ.3,776 மதிப்பீட்டில் 8,436 கோயில்க ளில் திருப்பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு 5,776 திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.2021- 22 நிதி யாண்டில் 1250 திருக்கோயில்களுக்கு திருப்பணி நிதி தலா ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டு ரூ.25 கோடி வழங்கப் பட்டது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
சென்னை, ஜூலை 28- பகுஜன் சமாஜ் கட்சியின் மாநி லத்தலைவர் த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் வெட்டி படுகொலை செய்யப் பட்டார். இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டுள்ள தமிழக காவல்துறை இதுவரை 18 பேரை கைது செய்துள்ளது.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாக மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முகிலன், அப்பு, விஜய் ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படு கொலை சம்பந்தமாக நாட்டு வெடிகுண்டு சப்ளை செய்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது வரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தை வஞ்சித்த ஒன்றிய அரசு
அதிமுக முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
மதுரை,ஜூலை 28- பட்ஜெட்டில் தமிழகத்து க்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கா மல் ஒன்றிய பாஜக அரசு வஞ்சித்துள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச் சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை கள்ளிக்குடி ஒன்றியம் சிவரக்கோட்டை யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்ச ரும், எதிர்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதய குமார் பேசுகையில், தமிழ கத்தை ஒன்றிய அரசு வஞ்சித் துள்ளது. பட்ஜெட்டில் தமிழ கத்துக்கு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதியும் தரவில்லை, நிவாரணமும் தரவி்ல்லை. பீகாருக்கும், ஆந்திராவுக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று பேசி னார்.