சென்னை,அக்.4- சிறைகளில் நிலவும் சாதிய பாகுபாடுகளை அடியோடு அகற்று மாறு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மனமார வரவேற் கிறது.
இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, பொதுச் செய லாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகி யோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
அம்பலமான பாகுபாடுகள்
இந்திய நாட்டின் பல்வேறு மாநி லங்களின் சிறை நெறி ஆவ ணங்களில் உள்ள பல்வேறு சாதிய பாரபட்ச நடைமுறைகள் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், ஒன்றிய அரசு 2016 மாதிரி சிறை நெறி ஆவணங்களையும், 2023 சிறை மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கான சட்டத்தை யும் இத்தீர்ப்புக்கு இயைந்த வகையில் 3 மாத கால அவகாசத் திற்குள் திருத்தியமைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. எல்லா மாநில/ ஒன்றிய ஆளுகை பிரதேசங்களும் தங்களின் சிறை நெறி ஆவ ணங்களை சாதிய பாகுபாடுகளை அகற்றுகிற வகையில் திருத்து மாறும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் சுகன்யா சாந்தா தொடர்ந்த வழக்கில் விசார ணையின் போது பல்வேறு மாநி லங்களின் சிறைகளில் நிலவும் சாதிய பாரபட்சங்கள் வெளிச்சத்து க்கு வந்தன. தமிழகத்தின் பாளை யங்கோட்டை சிறையில் கைதிகள் சாதி வாரியாக தனித்தனியாக அடை க்கப்பட்டுள்ளார்கள் என்பதும் பாகுபாடுகளில் ஒன்று.
துப்புரவு பணியும் சமையல் பணியும்
உத்தரப்பிரதேசத்தின் சிறை களில் சாதி பாகுபாடுகள் இல்லை என்று அம் மாநில அரசின் வழக்கறி ஞர் குறிப்பிட்டபோது தலையிட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி “சிறை கையேட்டிலிருந்து” வாசித்து காண்பித்த பகுதிகள் சாதிய அடிப் படையில் இழிவான பணிகள் ஒடுக் கப்பட்டவர்கள் மீது சுமத்தப்படு வதற்கு சாட்சியமாக அமைந்தன.
ராஜஸ்தான் சிறை விதிகள் 1951-இல் மெஃதார் சாதியை சார்ந்தவர்கள் கழிப்பறை சுத்தம் செய்யும் பணியிலும், பிராமணர்கள் மற்றும் உயர்சாதி யினர் சமையலறை பணியிலும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுதர்ம அணுகுமுறைக்கு முடிவு
காலகாலமாக சிறைக் கொட்டடி களில் சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தண்டனைகளை விட, ஒடுக்கப்பட்ட சிறைவாசிகளுக்கு சாதியின் பெயரால் கூடுதல் தண்ட னை வழங்கப்பட்டு வந்திருக்கிற மனுதர்ம அணுகுமுறைக்கு உச்ச நீதிமன்றத்தால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தீர்ப்பை அடுத்து தானாகவே முன் வந்து உச்சநீதிமன்றம் ஒரு வழக்கை பதிவு செய்து, ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளின் அமலாக்கத்தை கண்காணிப்போம் என்று அறிவித்தி ருப்பது மேலும் வரவேற்புக்குரியது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை உடனடியாக அமலாக்க ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசு உள்ளிட்ட மாநில அரசுகளும் முன்வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.