சென்னை, ஆக. 26 - மின்வாரியம் எத்தனை நிறு வனங்களாகப் பிரிக்கப்பட்டாலும் ஊழியர் நலன் பாதுகாக்கப்படும் என முத்தரப்பு ஒப்பந்தம் குறித்து அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1995-ஆம் ஆண்டு அப்போதைய ஒன்றிய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘காட்’ ஒப்பந்தத்தின் ஒரு பிரிவுதான் மின்வாரிய மறுசீரமைப்பு. அத னடிப்படையில், கடந்த 2003-இல் புதிய மின்சாரச் சட்டம் நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அனைத்து மாநில மின்வாரியங்கள் கலைக்கப் பட்டு விநியோகம், உற்பத்தி என தனித்தனி நிறுவனங்கள் உரு வாக்கப்பட்டன.
அதன்படி, தமிழக மின்வாரியம் டான்ஜெட்கோ, டான்டிரான்ஸ்கோ, தமிழ்நாடு மின்வாரி யம் லிமிடெட் என 3 நிறுவனங் களாக பிரிக்கப்பட்டன. இதை யடுத்து, 2010 அக்டோபர் 19 அன்று அரசாணை எண்.100-ஐ வெளியிட்டு மின்வாரிய தொழிலாளர்கள், அலுவலர்கள், பொறியாளர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியப் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை உறுதி செய்து கொள்ளும் வகையில் முத்தரப்பு ஒப்பந்தம் செய்ய வலியுறுத்தப் பட்டது. இதுதொடர்பாக பல்வேறு காரணங்களால் ஒப்பந்தம் ஏற்படாத நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் எரிசக்தித்துறை அரசிதழில் வெளியிட்டுள்ளது.
அதில், “மறுசீரமைப்பின் கீழ் மின்வாரியம் பல நிறுவனங்களாக பிரிக்கப்பட்டாலும் ஊழியர்கள் பணி நீக்கம் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படாது. ஊழியர் நலன்கள் பாதுகாக்கப்படும். ஊதிய உயர்வு, ஓய்வூதியம் போன்றவை வழங்கப்படும். ஒப்பந்தப்படி பிரிக்கப்பட்ட நிறுவனங்கள் செயல்படாவிட்டால், தமிழக அரசு அந்நிறுவனத்தை முறைப்படி செயல்பட அறிவுறுத்தும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் எழுப்பும் கேள்விகள்
இதனிடையே, “பிரிக்கப்பட்ட நிறுவனத்தின் பணப்புழக்கம் அடிப்படையில் ஊதியம் போன்றவை வழங்கப்படும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ரூ. 1.70 லட்சம் கோடி கடனில் இருக்கும் வாரியத்தில் எப்படி பணப்புழக்கம் இருக்கும்?” என்று தொழிலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், “தனியாருக்கு தாரை வார்க்க மாட்டோம், பணப்பலனுக்கு அரசே பொறுப்பு போன்ற முக்கிய உத்தரவாதங்கள் தரப்படவில்லை; ஊழியர் நலன் பாதுகாக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, அதற்கான வழிகள் எதுவும் வகுக்கப்படவில்லை” என்று கூறியிருக்கும் அவர்கள், “ஒன்றிய அரசின் அழுத்தத்தின் கீழ், தமிழக அரசு மின் வாரியத்தை தனியார் மயத்திற்கான நடவடிக்கையை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது” எனவும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.